பசியில் அழுத நடிகை.. பாதிவழியில் காரை நிறுத்தி ஊபர் டிரைவர் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ
பெங்களூர்: பெங்களூரில் விமான நிலையத்துக்கு ஊபர் காரில் நள்ளிரவில் இளம் நடிகை ஒருவர் சென்றார். சூட்டிங்கில் சாப்பிட முடியவில்லை. உடனடியாக விமானத்தை பிடிக்க வேண்டும் என்பதால் அவசரமாக செல்கிறேன். இப்போது வயிறு பசி தாங்க முடியவில்லை என்று செல்போனில் தனது தோழியிடம் கூறி அழுதார். அதனை ட்ட ஊபர் டிரைவர் காரை நிறுத்தி ‛சாண்ட்விச்' வாங்கி கொடுத்து நெகிழ வைத்தார். இதுதொடர்பாக அந்த நடிகை வெளியிட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் யோகிதா ரதோர். இவர் மாடல் அழகியாகவும், நடிகையாகவும் உள்ளார். பல்வேறு விளம்பரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் சூட்டிங்கிற்காக யோகிதா பெங்களூர் வந்தார். சூட்டிங்கை முடித்துவிட்டு மீண்டும் அவர் நள்ளிரவில் மும்பைக்கு புறப்பட்டார்.

ஊபர் வாடகை காரில் அவர் பெங்களூர் தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றார். அப்போது காரின் பின் இருக்கையில் இருந்த யோகிதா தனது தோழியிடம் செல்போனில் பேசினார்.
அப்போது அவர், அன்றைய தினம் பற்றி கூறினார். சூட்டிங் பற்றியும், அதிகப்படியான பணியால் சாப்பிடாமல் இருந்தது பற்றியும் கூறினார். மேலும் தனக்கு வயிறு பசி அதிகமாக உள்ளது. ஆனால் இரவு 2 மணிக்கு விமானம் இருக்கிறது. இதனால் விமான நிலையத்துக்கு செல்கிறேன் என்று கூறி அழுதார்.
இதைகேட்ட ஊபர் டிரைவர், காரை திடீரென்று பாதிவழியில் நிறுத்தினார். யோகிதாவிடம், ‛‛2 நிமிடங்களில் வருகிறேன்'' என்று கூறி சென்றார். கார் டிரைவர் கழிவறைக்கு செல்கிறார்? என்று யோகிதா நினைத்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் திரும்பி வந்த டிரைவர், யோகிதாவிடம் ஒரு பாக்ஸை கொடுத்தார்.
அதை பார்த்து வியப்படைந்தார். ‛என்ன இது?' என்று கேட்டார். அதற்கு ஊபர் டிரைவர், ‛சாண்ட்விச்.. சாப்பிடுங்கள்' என்றார். அதனைகேட்டு அவர் இன்ப அதிர்ச்சியடைந்தார். மேலும் அந்த டிரைவர், ‛‛ "உங்கள் தோழியிடம் நீங்கள் மிகவும் பசியாக இருப்பதாகச் சொன்னதைக் கேட்டேன். அதைகேட்டவுடன் என்னால் தாங்க முடியவில்லை.
மோசமாக உணர்ந்தேன். என் சகோதரி இந்த நிலையில் இருந்தால் நான் இப்படி தான் செய்திருப்பேன்.. சாப்பிடுங்கள்..நீங்கள் சைவஉணவு வேண்டும் என்று கூறியதையும் அதுசார்ந்த சாண்ட்விச் வாங்கி வந்தேன்'' என்று கூறினார்.
இதில் யோகிதா நெகிழ்ந்து போனார். இதனை தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். நடந்த சம்பவம் பற்றி நெகிழ்வோடு அவர் கூறியுள்ளார். ஊபர் டிரைவரை அவர் பாராட்டியதோடு, ‛‛அனைவரிடமும் அன்பாக இருப்போம். அனைவரிடமும் கருணை காட்ட வேண்டும். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் அவரவர் சார்ந்த பிரச்சனை, போராட்டங்கள் உள்ளன. ஆனால் உங்களின் கருணை பார்வை ஒருவரின் நாளையே மகிழ்விக்கும்'' என்று கூறினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications