அமுல்யாவுக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு.. ஜாமீன் கிடைக்காது.. அப்பாவும் கைவிட்டுவிட்டார்- எடியூரப்பா
பெங்களூர்: "பாகிஸ்தான் வாழ்க" என்று பெங்களூரு நிகழ்ச்சியில் கோஷமிட்ட பெண் நக்சலைட் அமைப்புடன் தொடர்புடையவர் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அந்தப் பெண்ணுக்கு ஜாமீன் கிடைக்காது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்திய குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பெங்களூரில் நேற்று மாலை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அசாதுதீன் ஓவைசி உள்ளிட்ட இஸ்லாமிய தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். அந்த கூட்டத்தில் இடதுசாரி ஆதரவாளரான அமுல்யா லியோனா, என்ற இளம்பெண்ணும் பங்கேற்றார்.

மேடையில் தோன்றி, அவர் திடீரென, 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்ற கோஷத்தை எழுப்பினார். பாகிஸ்தான் வாழ்க என்று இதற்கு அர்த்தம். இதை கேட்ட ஓவைசி விரைந்து வந்து அவரிடமிருந்து மைக்கைப் பிடுங்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் மேடையில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.
இதனிடையே தேச விரோத சட்டத்தின்கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அமுல்யா. இது ஒரு பக்கம் என்றால் சிக்மகளூரில் உள்ள அமுல்யா வீட்டை சில வலதுசாரிகள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அவரது வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா அமுல்யாவுக்கு, ஜாமீன் கிடைக்க போவது கிடையாது. அந்தப் பெண்ணுக்கு நக்சல் அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த பெண்ணுக்கு தக்க தண்டனை வழங்கப்படும். நாட்டுக்கு எதிரான செயல்பாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள அமுல்யா தனக்கு மகளே இல்லை என்றும் அவரை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றுவதற்கு முயற்சி செய்யப் போவதில்லை என்றும் அவரது தந்தையே தெரிவித்துவிட்டார். இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.
அமுல்யா தந்தை, உள்ளூர்மட்டத்தில், மதசார்பற்ற ஜனதாதள கட்சி பிரமுகராக உள்ளார். அவர் அளித்த பேட்டியில், எனது சொல்பேச்சை கேட்காமல் அவர் இப்படி புரட்சி பேசியபடி உள்ளார். அவர் பேசியது தவறானது என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications