உலுக்கிடுச்சே.. மூடிய அறைக்குள் சிக்கிய காதலன்.. அரண்டு போன பிசினஸ்மேன் கணவன்! பெங்களூரு பகீர்
பெங்களூரு: பெங்களூரு மாநகரின் பியாடராயணபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரக் கொலைச் சம்பவம், ஒட்டுமொத்த கர்நாடகாவையும் அதிர வைத்துள்ளது. சோஷியல் மீடியாவால் தடம் மாறிய ஒரு கள்ளக்காதல் விவகாரம், கடைசியில் பிளான் செய்யப்பட்ட கொலையாக முடிந்துள்ளது.. இதுகுறித்த பகீர் பின்னணியை போலீசார் இப்போது வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர். அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பீடி காலனியை சேர்ந்தவர் முகமது காசிம்.. இவருக்கு 27 வயதாகிறது.. தான் வசித்து வரும் அந்த பகுதியிலேயே சொந்தமாக ஒரு பழைய இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்..

பெங்களூரு கள்ளக்காதல் சம்பவம்
முகமது காசிமிற்கும், அர்பியா கவுசர் என்ற பெண்ணுக்கும் இடையே திருமணத்திற்கு முன்பாகவே சுமார் 7 வருட காலமாகவே காதல் இருந்து வந்துள்ளது. இவர்களின் காதல் தீவிரமாக இருந்தபோதிலும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அர்பியா கவுசருக்கு, முகமது அக்பர் என்ற நபருடன் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு இந்தத் தம்பதியினர் பெங்களூரு பியாடராயணபுரா போலீஸ் எல்லைக்குட்பட்ட சியாமண்ணா கார்டன் பகுதியில் வசித்து வந்தனர்.
புதிய குடும்பம் - ஆண் நண்பர்
திருமணமாகி அர்பியா கவுசர் தனது புதிய குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினார்.. ஆனால் அப்போதுகூட காசிமுடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படவில்லை. சோஷியல் மீடியா மூலமாக இவர்களுக்குள் மீண்டும் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது.
கணவருக்கு தெரியாமல் அர்பியா கவுசர் தனது முன்னாள் காதலனான முகமது காசிமுடன் தொடர்ந்து பேசி வந்ததுடன், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இவர்களின் தவறான உறவு குறித்து அர்பியா கவுசரின் கணவர் முகமது அக்பருக்குத் தெரியவந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனே தனது மனைவியைக் கடுமையாக கண்டித்துள்ளார். ஆனாலும் கணவரின் பேச்சை காதில் போட்டுக் கொள்ளாமல், அர்பியா கவுசர் தனது கள்ளத்தொடர்பை கைவிடாமல் காசிமுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இது முகமது அக்பருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்தான், கடந்த மே 25ம் தேதியன்று கள்ளக்காதலியை சந்திக்க, ராமநகரிலிருந்து பெங்களூரு பியாடராயணபுராவில் உள்ள அர்பியா கவுசரின் வீட்டிற்கே முகமது காசிம் வந்துள்ளார். இருவரும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்..
பிடிபட்ட காதலர்கள்
இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட கணவர் முகமது அக்பர், தன்னுடைய ஒட்டுமொத்த சொந்தக்காரர்களையும் அழைத்து கொண்டு, திடீரென வீட்டிற்குள் நுழைந்துவிட்டார்.. அங்கு முகமது காசிமையும், அர்பியா கவுசரையும் அவர்கள் கையும் களவுமாக பிடித்துவிட்டார்.
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் உறவை துண்டிக்காத ஆத்திரத்தில், முகமது அக்பர் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து காசிமினை மிருகத்தனமாக அடித்து, உதைத்துத் தாக்கியுள்ளனர்.
வீட்டிற்குள் நடந்த தகராறு நடுத்தெரு வரை வந்தது.. இதனால பொதுமக்கள் தலையிட்டு சண்டையை தடுத்து நிறுத்தினர். காசிமுக்கு உடம்பெல்லாம் படுகாயம் ஏற்பட்டது.. உடனடியலாக அங்கிருந்து எப்படியோ தப்பித்து ராமநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திடீர் ட்விஸ்ட்
காசிமின் மரணத்தைத் தொடர்ந்து பியாடராயணபுரா போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போதுதான் அந்த பகீர் தகவல் வெளியானது.
அதாவது முகமது காசிமை தீர்த்துக்கட்ட அவரது கள்ளக்காதலி அர்பியா கவுசரே தனது கணவருக்கு முழுமையாக உதவி செய்தது அம்பலமானது. காசிமை வீட்டிற்கு வரவழைத்து, கணவரிடம் கையும் களவுமாக மாட்ட வைத்ததில் அர்பியா கவுசருக்கு முக்கியப் பங்கு இருப்பதும் உறுதியானது.
இதையடுத்து, முகமது காசிமை கொலை செய்த குற்றத்திற்காக கள்ளக்காதலி அர்பியா கவுசர், அவரது கணவர் முகமது அக்பர் மற்றும் இக்கொலைக்கு உடந்தையாக இருந்து தாக்குதல் நடத்திய அக்பரின் உறவினர்களான ஓவைஸ் வாசா, முகமது சாந்த் பாஷா ஆகிய நான்கு பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்...!!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications