Digital Arrest: 6 மாசமாக சித்திரவதை அனுபவித்த பெங்களூர் பெண்.. ரூ.33 கோடி மோசடி செய்த ஷாக் சம்பவம்
பெங்களூரு: தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்று வரும் நிலையில், மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெங்களூரைச் சேர்ந்த 57 வயது பெண்ணை ஆறு மாதங்களாக டிஜிட்டல் அரெஸ்ட் செய்து, ரூ. 33 கோடியை மோசடி செய்துள்ள சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி, ஏஐ தொழில்நுட்பம் என நாளுக்கு நாள் பெருக பெருக அது தொடர்பான மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. பெட்டிக் கடை முதல் மால்கள் வரை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளே அதிகளவில் செய்யப்படுகின்றன. டிஜிட்டல் முறையில் நடக்கும் பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

வயதானவர்கள், பெண்கள் என அப்பாவிகள் பலரும் இந்த டிஜிட்டல் மோசடியாளர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர். அதிகளவிலான பணப் பரிவர்த்தனை, மோசடி பரிவர்த்தனை, தாங்கள் சிபிஐ அதிகாரிகள் என்றெல்லாம் சொல்லி, உங்களைப் கைது செய்ய போவதாக மிரட்டுகிறார்கள். இதைக்கேட்டு பயந்துபோகும் நபர்களை மிரட்டியே பணத்தை லட்சக்கணக்கில் பறித்து விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த டிஜிட்டல் அரெஸ்ட் மூலாக மோசடி செய்பவர்கள் சட்ட அமலாக்க அதிகாரிகள் அல்லது அரசு நிறுவனங்களின் பணியாளர்கள், சிபிஐ அதிகாரிகள் என்பது போல நடித்து ஆடியோ அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுகிறார்கள். அதை உண்மை என நம்புவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து பணம் செலுத்த அழுத்தம் கொடுக்கின்றனர்.
அந்த வகையில், பெங்களூரைச் சேர்ந்த 57 வயது பெண்மணி ஒருவர் கடந்த 6 மாதங்களாக டிஜிட்டல் கைது செய்யப்பட்ட ரூ. 33 கோடி மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்தவர் 57 வயது பெண். இந்தப் பெண்ணை செல்போன் எண் மூலமாக மோசடியாளர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அவரிடம், சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து ஆள்மாறாட்டம் செய்பவர்கள் அவரை தொடர்ந்து வீடியோ கண்காணிப்பில் வைத்திருந்துள்ளனர். உங்களுடைய வீட்டைக் கண்காணித்து வருகிறோம். போலீஸாரை தொடர்பு கொள்ளக் கூடாது என மிரட்டியுள்ளனர்.
அந்தப் பெண்ணுடைய மகளுக்குத் திருமணம் நடக்கவிருந்த நிலையில், குடும்பத்தின் பாதுகாப்புக்கு பிரச்சனை ஆகிவிடுமோ என்று பயந்துபோன அப்பெண் அவர்கள் கூறுவதை எல்லாம் செய்துள்ளார். 187 வங்கி பணப் பரிமாற்றங்களைச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதன் மூலமாக ரூ. 31.83 கோடியை அவர் இழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் போலீஸாரிடம் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிஜிட்டல் மோசடியாளர்கள் செய்த தொடர் டார்ச்சர் மற்றும் அளித்த மனஅழுத்தம் காரணமாக அப்பெண் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications