பலரின் ரோல் மாடல்.. தீவிர உடற்பயிற்சி.. பிரபல சைக்கிளிஸ்ட் அணில் மாரடைப்பால் மரணம்.. என்ன நடந்தது?
பெங்களூர்: பெங்களூரை சேர்ந்த பிரபல சைக்கிள் ஓட்டுநர் அணில் கட்சூரின் மரணம் தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகப்படியான உடற்பயிற்சி காரணமாக பலருக்கும் இதயம் பாதிப்பு அடைவதாக மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அனில் கட்சூர் தேசிய அளவில் பிரபலமான சைக்கிள் ஓட்டுநர் ஆவார். 45 வயதான அவர் மாரடைப்பு காரணமாக இரண்டு நாட்களுக்கு முன் காலமானார். தினசரி 100 கிமீ ரைடுகளுக்குப் பெயர் பெற்ற அவர், 42 மாதங்கள் தொடர்ச்சியாக 1,250 செஞ்சுரி ரைடுகளை முடித்து தேசிய அளவில் கவனிக்கப்பட்டார்.

அவர் தனது பணிவான மற்றும் அன்பான குணத்திற்காக பாராட்டப்பட்டார், தனது நிபுணத்துவத்தை எப்போதும் ஆர்வத்துடன் புதிய சைக்கிள் ஓட்டுனர்களுக்கு பகிர்ந்து கொண்டார். பல அரசியல் வாதிகள், சினிமா பிரபலங்கள் இவரின் தீவிர பின் தொடர்பாளர்களாக இருந்தனர்.
2 நாட்களுக்கு முன் மரணம்: 2 நாட்களுக்கு முன் இவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் இயல்பாக ஏற்படும் மூச்சு இரைப்பு என்று நினைத்து இருக்கிறார். சில நிமிடங்களில் அவருக்கு கடுமையான உடல் வலியும் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சில மணி நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்துள்ளார். அவரை கோல்டன் நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்க முடியாததும் மரணத்திற்கு காரணம் என்கிறார்கள். அதிகப்படியான உடற்பயிற்சி காரணமாக பலருக்கும் இதயம் பாதிப்பு அடைவதாக மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சரியான தூக்கம் இல்லாதது, அதிக நேரம் உடற்பயிற்சி செய்தது, மிக அதிக அளவில் சைக்கிள் ஓட்டியது அவரின் மரணத்திற்கு ஒரு காரணமாக மாறிவிட்டது என்கிறார்கள்.
உடற்பயிற்சி மரணங்கள்: கடந்த 2021ம் ஆண்டு நடிகர் புனீத் ராஜ்குமார் ஜிம்மில் மரணம் அடைந்தார். வெயிட் லிப்டிங் தூக்கிக்கொண்டு இருக்கும் போதே அவர் மரணம் அடைந்தார். அவரின் கடைசி வீடியோ கூட இணையத்தில் வெளியாகி இருந்தது. ஆனால் அது கடைசி சம்பவம் கிடையாது.
அதற்கு முன்பும், பின்பும் இதேபோல் பல சம்பவங்கள் அடிக்கடி நடந்துள்ளன. அதில் புதிதாக இணைந்ததுதான் இன்று நடந்த சம்பவம் ஆகும். இன்று சென்னை கொரட்டூரில் உள்ள ஜிம்மில் மயங்கி விழுந்து ஜிம் டிரெய்னர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் பெயர் ஏபின் ()என்று கூறப்படுகிறது. அங்கே தினமும் பலருக்கும் பயிற்சி கொடுத்து வருகிறார் இவர். தானும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்து உள்ளது. பயிற்சி செய்யும் போது மயக்கம் வந்துள்ளது. இதனால் புத்துணர்ச்சியாக உணர இவர் ஜிம் குளியல் அறைக்கு சென்றுள்ளார். அங்கே குளிக்கும் போதே இவர் மயங்கி விழுந்து உள்ளார் . பல மணி நேரம் ஆகியும் அவர் வெளியே வராத காரணத்தால் உள்ளே சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் பலியாகிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனையில் செய்யப்பட்ட சோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆணழகன் போட்டிக்கு தயாராகி வந்த நிலையில் அந்த ஜிம் டிரெய்னர் பலியானதாக கூறப்படுகிறது.
அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள்: சமீபத்தில் பாரதி கண்ணம்மா புகழ் நடிகை ஸ்ருதி சண்முக பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் ஆகஸ்ட் 2 ஆம் தேதி காலமானார். காரணம் மாரடைப்பு என்று கூறப்பட்டது. பாடிபில்டரான அரவிந்த், 30 வயதில் பலியாகி உள்ளார். அவர் ஒரு முன்னாள் மிஸ்டர் தமிழ்நாடு ஆவார். அவரின் மரணத்திற்கு ஜிம் காரணம் இல்லை என்று சொல்லப்பட்டாலும் ஜிம் செல்லும் ஒருவர் இளம் வயதில் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் ஹைதராபாத்தில் விஷால் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் இதேபோல் மாரடைப்பால் பலியானார். ஜிம்மில் புஷ் அப் செய்யும் போதே மயங்கி விழுந்த அவர் மாரடைப்பால் காவலர் உயிரிழந்தார். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில், விஷால் புஷ்-அப்களைச் செய்த பிறகு கடுமையாக இருமுவதையும், தரையில் விழுந்ததையும் பார்க முடிந்தது, அதைத் தொடர்ந்து மக்கள் அவருக்கு உதவ முயற்சி செய்கிறார்கள். ஆனால் அங்கேயே அவர் துடி துடித்து பலியாவதாக காட்சிகள் பதிவாகி உள்ளன.
பிரபலம் மரணம்: அதற்கு முன்பு யூ டியூப் பிரபலமான பாடிபில்டர் ஜோ லிண்டர் தனது 30வது வயதில் கடந்த சில வாரங்களுக்கு முன் காலமானார். இவர் ஜெர்மனியை சேர்ந்தவர். பாடிபில்டிங் பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை YouTube இல் பகிர்வதில் ஜோ லிண்டர் பிரபலமானவர். இளைஞர்கள் இடையே மிகப்பெரிய சூப்பர் ஹீரோவாக, சிக்மா ஆணாக ஜோ லிண்டர் திகழ்ந்து வந்தார். பாடிபில்டிங் தொடர்பாக தினசரி செய்யும் பயிற்சிகள் மற்றும் ஆன்லைனில் அவர் பகிர்ந்து கொள்ளும் விஷயங்களால் ஜோ பெரிய அளவில் கவனிக்கப்பட்டார் .
அவர் ஜோஸ்தெடிக்ஸ் பயிற்சி அமைப்பு என்று தனது சொந்த பயிற்சித் திட்டத்தை உருவாக்கி அதை இளைஞர்கள் இடையே பிரபலமாகி கொண்டு சென்றார்.அவரது காதலியான சக பாடிபில்டர் நிச்சா உடன் இணைந்து இருவரும் இன்ஸ்டாகிராமில் பாடி பில்டிங் தொடர்பாக ரீலிஸ் போட்டு வந்தார். இந்த நிலையில்தான் நேற்று மாலை அவர் நரம்பு வெடித்து பலியானார். இந்தச் செய்தியை அவரது நெருங்கிய நண்பரான நோயல் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்தார்.
இணையத்தில் ஜோ பலருக்கு ரோல் மாடலாக இருந்தார். அவரது திடீர் மறைவு பாடிபில்டிங் சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிச்சாவின் இன்ஸ்டாகிராம் பதிவில், அனியூரிசம் என்று நோயின் காரணமாக ஜோ காலமானார் என்று கூறி உள்ளார்.
மேலும் சில மரணங்கள்: கடந்த வருடம் ஜூன் 4 அன்று, மதுரை பழங்காநத்தத்தில் உடற்பயிற்சியை முடித்த இளைஞர் ஸ்ரீ விஷ்ணு ஜிம்மில் சுருண்டு விழுந்து பலியானார். சக ஜிம் உறுப்பினர்கள் 27 வயதான ஸ்ரீ விஷ்ணுவை எல்பி மருத்துவமனைக்கும் பின்னர் மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவித்தனர். வெறும் 27 வயதில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு பலியானார். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத அந்த இளைஞர் ஜிம்மில் பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் கடந்த மார்ச் மாதம் ஆவடியைச் சேர்ந்த 25 வயதான பாடிபில்டர் மற்றும் ஜிம் பயிற்சியாளர் ஸ்டெராய்டுகள் மற்றும் பிற சப்ளிமெண்ட்ஸ்களை அதிகமாக உட்கொண்டதால் இறந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் அந்த நபரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். நெமிலிச்சேரியில் வசிக்கும் சபரிமுத்து என்ற ஆகாஷ், 25, உடற்கட்டமைப்பு போட்டிக்கு தயாராகி கொண்டிருந்தார். இதற்காக அவர் மருந்துகளை எடுத்து இருந்தார்.
இதில் அவர் கிட்னி செயல் இழந்தது. அதை தொடர்ந்து அவரின் மற்ற உறுப்புகள் செயல் இழந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் பலியானார். அதிலும் சாவதற்கு கடந்த சில நாட்கள் முன்பு வரை மூச்சு விட முடியாமல் அவர் கடுமையாக திணறினார். அதேபோல் தமிழ்நாட்டில் மட்டுமின்றி மற்ற சில மாநிலங்களிலும் இதேபோல் ஜிம்மில் இளைஞர்கள் பலியாவது அதிகரித்து வருகிறது.
முக்கியமாக கொரோனாவிற்கு பின் இப்படி பலர் ஜிம்மிலேயே பலியாகி வருகின்றனர். பலருக்கும் மாரடைப்பு ஏற்படுவது வழக்கம் ஆகி உள்ளது. ஸ்டெராய்டு ஓவர் டோஸ் காரணமாக மரணம் ஏற்படுவதை கூட ஏற்றுக்கொள்ள முடியும் . ஆனால் இந்த சாதாரண மரணங்கள் ஜிம் பயிற்சி, கொரோனாவிற்கு பின்பான மாரடைப்பு வாய்ப்புகள் ஆகியவை மீது கடும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இப்படி இந்தியா முழுக்க பல சம்பவங்கள் நடந்து உள்ளன. ஜிம்மிற்கு செல்லும் ஆண்கள் மட்டும் இப்படி திடீர் திடீரென மாரடைப்பு வந்து பலியாவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. டயட் காரணமா? போதிய தண்ணீர் குடிக்காததா? அதிக உடல் பயிற்சி காரணமாக ஏற்படும் வேகமாக மூச்சு இரைப்பா? அதிக எடை தூக்குவதா? புரோட்டீன் பவுடர் எடுப்பதா? கொரோனாவிற்கு பின்பான நீண்ட கால பக்க விளைவா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications