பெங்களூர் மெட்ரோ ரயிலில் பிச்சைக்காரரை கண்டதுமே திகைத்த பயணிகள்.. பெங்களூருவாசிகளுக்கு வந்த சந்தேகம்
பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ ரயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சென்று வருகிறார்கள்.. இந்நிலையில், மெட்ரோ ரயிலில் பிச்சை எடுத்த நபரால் சக பயணியர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.. அத்துடன் வீடியோவை பார்த்ததுமே மிகப்பெரிய கேள்வியையும், சந்தேகத்தையும் இணையவாசிகள் எழுப்பி வருகிறார்கள். அது என்ன?
ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும் வகையில் இருந்தாலும், பெரும்பாலான மாநிலங்கள் பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றமாகவே கருதப்படுகிறது..

சில மாநிலங்களில் சிறை தண்டனை, அபராதம் என விதிக்கப்பட்டது. அதாவது, பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள் என பொதுமக்களுக்கு இடையூறு மேற்கொள்ளும் வகையில் பிச்சை எடுப்பது என்பது கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அவர்கள் விருப்பத்தின் பெயரில் பிச்சை எடுப்பதில்லை, சூழ்நிலை காரணமாக தான் இத்தகைய மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதனால் பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றமாக அறிவிப்பது என்பது அவர்களை மேலும் அழுத்தம் தர கூடியவையாக மாறும் என்றெல்லாம் பல்வேறு பொதுநல வழக்குகள் சுப்ரீம் கோர்ட் வரை சென்றது நினைவிருக்கலாம்.
ரயிலில் பிச்சை எடுத்தல்
முன்பெல்லாம் ரயில்வே சட்டப்பிரிவுகளின்படி ரயில்களில் பிச்சை எடுத்தால் ஓராண்டு சிறை அல்லது 2000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.. அதேபோல் ரயிலில் புகைப்பிடிப்பதும் குற்றம் என்ற விதிகள் உண்டு. இந்த இரு சட்ட விதிகளிலும் மாற்றங்களைக் கொண்டு வர புதிய சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
அதன்படி பிச்சை எடுத்தல் மற்றும் புகைப்பிடித்தல் குற்றங்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படாது. ஆனால் ரயில்களில் யாரும் பிச்சை எடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். புகைப்பிடிப்போருக்கு அபராதம் விதிக்கப்படும், ஆனால், வழக்கு தொடரப்படாது என்ற திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
அழுக்கு டிரஸ் பயணி
அதேபோல பெங்களூரில், மெட்ரோ ரயில்களில் உணவு உண்ணக்கூடாது, புகை பிடிக்கக்கூடாது, கேமராக்களில் படம் எடுக்கக்கூடாது, அநாகரிக செயல்களில் ஈடுபடக்கூடாது, மொபைலில் சத்தம் அதிகமாக வைத்து உபயோகிக்கக்கூடாது, பிச்சை எடுக்கக்கூடாது என்று பல விதிமுறைகள் உள்ளன.
மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் பிச்சைக்காரர்கள் அழுக்கு உடையில் செல்லவும் முடியாது.. கடந்த வருடம் பெங்களூர் மெட்ரோ ரயிலில், அழுக்கு சட்டை மற்றும் வேட்டி அணிந்தபடி தலையில் மூட்டையுடன் முதியவர் ஒருவர் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வந்தார்..
அவர் மெட்ரோ ரெயிலில் பயணிக்க வேண்டும் என்று அங்கு பணியில் இருப்போரிடம் சொன்னதற்கு, மெட்ரோ ரெயில் நிலைய பாதுகாப்பு மேற்பாவையாளர், அந்த முதியவரை உள்ளே அனுமதிக்க மறுத்தார்.. மேலும் அவரிடம் கடுமையாக பேசி அங்கிருந்து வெளியேறுமாறு சொன்னார்.. இந்த நிகழ்வு வீடியோவாகவும் வெளியாகி, கண்டனத்தை பெற்றிருந்தது.
மெட்ரோ விஐபிகளுக்கு மட்டுமா
பெங்களூரு மெட்ரோவில் விஐபிகள் மட்டும்தான் பயணிக்க வேண்டுமா? மெட்ரோவில் பயணிக்க ஆடை கட்டுப்பாடு உள்ளதா? என்று பலர் கண்டனத்தை பதிவு செய்தது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், இதே பெங்களூரு மெட்ரோ ரயிலில், மற்றொரு நிகழ்வு நடந்துள்ளது.. ஒரு பிச்சைக்காரர் டிப்-டாப் உடையில் மெட்ரோ மெட்ரோ ரெயிலில் பயணித்து பயணிகளிடம் யாசகம் பெற்றுள்ளார்.. மெஜஸ்டிக் மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் புகுந்து யஷ்வந்தபுரத்துக்கு செல்ல டிக்கெட் எடுத்த அந்த நபர், ரெயில் ஏறி பயணத்தை தொடங்கியதும் பயணிகளிடம் பிச்சை கேட்டு யாசகம் பெற்றார்.
துண்டு சீட்டு தந்த பிச்சைக்காரர்
ரயிலில் ஏறியதுமே, அங்கிருந்த பயணிகளிடம் ஒரு துண்டு சீட்டை தந்தார்.. அதில், "நான் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி, எனக்கு உதவி செய்யுங்கள்' என்று எழுதப்பட்டிருந்தது.. அந்த சீட்டை பயணிகளிடம் கொடுத்து, அதன்மூலம் அவர் யாசகம் பெற்றார்.
இதைக்கண்ட மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் அவரை பிடித்து ரூ.500 அபராதம் விதித்தனர். இதற்கிடையே இதை மெட்ரோ ரெயிலில் பயணித்த பயணி ஒருவர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிடவும், அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
கருப்பு டி-ஷர்ட்
அந்த வீடியோவில், கருப்பு டி ஷர்ட் அணிந்த நபர், சக பயணியரிடம் பிச்சை எடுக்கவும், அனைவருமே அதிர்ச்சி அடைகின்றனர்.
காரணம், மெட்ரோ ரயிலில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்ய முடியாது. டிக்கெட் விலையும் 10 முதல் 90 ரூபாய் வரை உள்ளது. அப்படி இருக்கையில், இந்த நபர் எவ்வாறு காசு கொடுத்து டிக்கெட் வாங்கிவிட்டு ரயிலுக்குள் சென்று பிச்சை எடுத்தார் என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications