இப்படியும் சாதனை.. ஃபைன் போட்டு தள்ளிய டிராபிக் போலீஸ்.. அடேயப்பா.. ஆறு மணி நேரத்தில் இவ்வளவா?
பெங்களூர் : கர்நாடக மாநிலம் பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து ஒரே நாளில் ரூ.2.04 லட்சம் அபராதமாக வசூலித்துள்ளார் போக்குவரத்து காவலர் ஒருவர்.
போக்குவரத்து காவல் அதிகாரியின் இந்த அரிய சாதனை குறித்து பெங்களூரின் காமாட்சிபாளையா போக்குவரத்து போலீசார் அவரது படத்துடன் ட்வீட் செய்துள்ளனர்.
தனது இத்தனை ஆண்டு கால பணி அனுபவத்தில் 6 மணி நேரத்தில் இவ்வளவு பெரிய தொகை அபராதமாக வசூலிக்கப்படுவது இதுவே முதல்முறை என சிவண்ணா தெரிவித்துள்ளார்.

6 மணி நேரத்தில்
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள காமாட்சிபாளையா போக்குவரத்து காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் எம்.சிவண்ணா. இவர் ஜூன் 21-ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஞானபாரதி ஜங்ஷனில் பணியில் ஈடுபட்டார்.
இந்த 6 மணி நேரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களிடம் ரூ.2.04 லட்சம் அபராதமாக வசூலித்துள்ளார்.

ஒரே நபரிடம்
249 போக்குவரத்து விதிமீறல்களுக்காக ரூ.2.04 லட்சம் அபராதமாக வசூலித்துள்ளார் சிவண்ணா. இதில் அதிகபட்சமாக எஸ்யூவி கார் உரிமையாளர் ஒருவரிடம் கடந்த 6 மாதங்களில் நகரின் 36 இடங்களில் 'நோ பார்க்கிங்' விதிமுறைகளை மீறியதற்காக ரூ.36 ஆயிரத்தை அபராதமாக வசூலித்துள்ளார்.

சிவண்ணா
அந்த ஆறு மணி நேரத்தில், அந்த எஸ்யூவி தவிர, சில இரு சக்கர வாகனங்கள் மீது கிட்டத்தட்ட 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான விதிமீறல்கள் தவறான பார்க்கிங் மற்றும் சிக்னல் ஜம்பிங் மற்றும் ஹெல்மெட் இல்லாமல் சவாரி செய்ததற்காக விதிக்கப்பட்டதாக போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவண்ணா கூறியுள்ளார்.

அனுபவத்தில் முதல் முறை
போக்குவரத்து காவல் அதிகாரியின் இந்த அரிய சாதனை குறித்து காமாட்சிபாளையா போக்குவரத்து போலீசார் அவரது படத்துடன் ட்வீட் செய்துள்ளனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சிவண்ணா கூறுகையில், "எனது வாழ்க்கையில் 12 வருட போக்குவரத்து காவல்துறை அனுபவத்தில் 6 மணி நேரத்துக்குள் இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக வசூலிப்பது இதுவே முதல்முறை" எனத் தெரிவித்துள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications