கர்நாடகாவில் வெடித்த "ஜட்டி சண்டை".. காங். தீ வைக்க.. பாஜக கொளுத்தி போட! ச்சீ ச்சீ என்ன அசிங்கம் இது
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் இடையே ஜட்டி சண்டை ஏற்பட்டுள்ளது. என்னது ஜட்டி சண்டையா என்று கேட்கிறீர்களா? ஆம்.. அங்கு இருக்கும் பாஜக - காங்கிரஸ் நிர்வாகிகள் ஜட்டியை வைத்து சண்டை போட்டு வருகிறார்கள்.
கர்நாடக அரசியல் பொதுவாகவே அவர்களின் சாம்பார் போலவே.. ஸ்வீட் - காரம் கலந்து இருக்கும். சட்டசபையில் இரவு வரை சண்டை போடுவது, சட்டசபையிலேயே எலுமிச்சை வைத்து மந்திரிப்பது, முதல்வரும், எதிர்கட்சித் தலைவரும் மாறி மாறி கண்ணீர்விடுவது என்று பல சுவாரசிய சம்பவங்கள் அங்கு நடந்துள்ளன.
அது பாம்பு இல்லை.. எனது புருஷன்! நாகப்பாம்புடன் 4 நாட்கள் வாழ்ந்த மூதாட்டி! அதிர்ந்த கர்நாடக கிராமம்
இந்த நிலையில்தான் அங்கு ஜட்டியை மையமாக வைத்து போராட்டம் நடந்து வருகிறது. அங்கு பாஜக ஆட்சிக்கு வந்த பின், கல்வி திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
போராட்டம்
இந்த மாற்றங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது,. கல்வி திட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தலையிடுவதாக கூறி காங்கிரஸ் மாணவர் அணி சார்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் காக்கி சட்டையை எரிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பிசி நாகேஷ் வீட்டிற்கு முன்பாக இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
காங்கிரஸ்
இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் பல்வேறு இடங்களில் பேரணி செய்தனர். அமைச்சரின் வீட்டை காங்கிரஸ் கட்சியினர் தீ வைக்க பார்க்கிறார்கள் கூறி பாஜகவினர் கோஷங்களை எழுப்பினர். அதோடு காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணியை சேர்ந்த 22 பேர் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டனர். இது காங்கிரஸ் கட்சியினர் இடையே கொதிப்பை ஏற்படுத்தியது.
ஜட்டி
இந்த போராட்டங்கள் குறித்து விளக்கம் அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா, நாங்கள் வெறுமனே காக்கி டிரவுசர்களைத்தான் எரித்தோம். ஆனால் பாஜக திருந்தவில்லை என்றால், மாநிலம் முழுக்க காக்கி டிரவுசர்களையும், ஜட்டியையும் எரிப்போம் என்று கிண்டலாக கூறினார். ஆனால் இவர் சொன்னதை சீரியஸாக எடுத்துக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கர்நாடகா முழுக்க பல இடங்களில் காக்கி டிரவுசர்களையும், ஜட்டிகளையும் எரித்தனர்.
போராட்டம்
பாஜக ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் ஜட்டிகளை எரித்தனர். இதற்கு பதில் அளித்த பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, காங்கிரஸ் கட்சியின் ஜட்டியை மக்கள் உருவிவிட்டார்கள். மத்திய பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களில் தோற்று அவர்களின் ஜட்டி லூஸாகிவிட்டது. இதனால் அது ஈசியாக கழன்றுவிடுகிறது. எனவேதான் அதை வைத்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் செய்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
என்ன சண்டை இது?
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜகவினர்,. ஆர்எஸ்எஸ் அமைப்பினர்.. உங்களின் ஜட்டிகளை எரித்துவிட்டீர்கள். உங்களிடம் ஜட்டி இருக்காது என்று கூறி, காங்கிரஸ் கட்சி பெங்களூர் அலுவலகத்திற்கு, ஜட்டிகளை பார்சல் செய்து அனுப்பி வருகின்றனர். பல மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு ஜட்டிகளை பார்சல் அனுப்பி பாஜகவினர் அங்கு போராடி வருகிறார்கள். இரண்டு தேசிய கட்சிகள் இப்படி ஜட்டியை வைத்து சண்டை போடுவது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.