எடியூரப்பா மகனுக்கு இத்தனை எதிர்ப்பா?கர்நாடகா பாஜகவுக்கு மொத்தமாக வாய்ப்பூட்டு போட்ட டெல்லி மேலிடம்!
பெங்களூர்: கர்நாடகா மாநில பாஜக தலைவராக எடியூரப்பா மகன் விஜயேந்திரா நியமிக்கப்பட்டதற்கு எதிராக மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியை கொட்டி வருகின்றனர். இதனையடுத்து விஜயேந்திரா நியமனம் தொடர்பாக ஊடகங்களில் யாருமே கருத்து தெரிவிக்கவே கூடாது என பாஜக மேலிடம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. தென்னிந்தியாவில் ஒரே மாநிலத்தில் நடைபெற்ற ஆட்சியையும் பாஜக, காங்கிரஸிடம் பறிகொடுத்தது. கர்நாடகாவில் பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்து 7 மாதங்கள் கடந்துவிட்டன.

ஆனால் கர்நாடகா பாஜகவுக்கு 7 மாதங்களாக மாநில தலைவர் நியமிக்கப்படவில்லை. சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று நளின் குமார் கட்டீல் பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய மாநில தலைவர் பதவிக்கு பல தலைவர்கள் போட்டி போட்டனர். இதனால் யாரை தலைவராக நியமிப்பது என டெல்லி மேலிடம் ரொம்பவே குழம்பி போனது. ஒருவழியாக தற்போது எடியூரப்பா மகன் விஜயேந்திரா, கர்நாடகா மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் எடியூரப்பா மகனை பாஜக தலைவராக நியமித்ததற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். பாஜக தலைவர் பதவியை ரொம்பவே எதிர்பார்த்திருந்த சிடி ரவி, இந்த நியமனம் தொடர்பாக எனக்கும் கேள்விகள் இருக்கின்றன. ஆனால் இந்த கேள்விகளை ஊடகங்களில் பேச முடியாது என்றார். மற்றொரு மூத்த தலைவரான சோமண்ணா, பாஜகவை விட்டே விலகி காங்கிரஸில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இன்னொரு பக்கம், மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து வரும் 17-ந் தேதி முடிவெடுக்கப்பட உள்ளது.'
இந்நிலையில்தான் கர்நாடகா பாஜக விவகாரங்கள் குறித்து ஊடகங்களில் யாரும் கருத்து தெஇவிக்க கூடாது என டெல்லி மேலிடம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாம். விஜயேந்திராவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதை உணர்ந்து கொண்ட பாஜக மேலிடம் இந்த தடை உத்தரவை பிறப்பித்திருக்கிறதாம். கர்நாடகா மாநில பாஜக தலைவராக விஜயேந்திரா நாளை பொறுப்பேற்க உள்ள நிலையில் அதிருப்தி தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலைக்கு புதிய ‘ரோல்'..தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக கொடுத்த முக்கிய ‘அசைன்மென்ட்' -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே! -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications