பெங்களூரை உலுக்கிய குண்டு வெடிப்பு.. மக்கள் கூட்டம் அலைமோதும்.. ராமேஸ்வரம் கஃபேவின் ஓனர்கள் யார்?
பெங்களூர்: பெங்களூரில் நேற்று குண்டு வெடித்த ராமேஸ்வரம் கஃபே தற்போது அங்கே மிகவும் பிரபலமாக இருக்கும் உணவகங்களில் ஒன்றாகும்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல உணவகம் ராமேஸ்வரம் கஃபே. இந்த உணவகத்தின் ஒயிட் லீட் கிளையானது 80 அடி சாலையில் அமைந்திருக்கிறது. இந்த கஃபேயானது நேற்று வழக்கம் போல் செயல்பட்டு வந்தது. அப்போது மதிய நேரத்தில் கஃபேயில் இருந்து மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதில் உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.

இது பெரிய அளவிலான குண்டுவெடிப்பு அல்ல, இது ஒரு தற்செயலான வெடிகுண்டு. இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்துள்ளன, இது நடக்கக்கூடாது. அது என்னவென்று பார்ப்போம். சமீப காலங்களில், இதுபோன்ற குண்டுவெடிப்புகள் குறைந்து இருந்தது. தற்போது மீண்டும் நடந்துள்ளது. . பாஜக ஆட்சியின் போது மங்களூரு பகுதியில் இப்படி நடந்தது. எங்கள் ஆட்சியின் போது இது போன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்று சித்தராமையா கூறியுள்ளார்.
இதில் கைதானவர் யார் அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்ற விவரம் வெளியாகவில்லை. குண்டுவெடிப்பில் காயமடைந்த 19 வயது ஓட்டல் ஊழியர் ஃபரூக், அமேசான் ஊழியர் தீபன்சு (23), ஸ்வர்ணாம்பா (49), மோகன் (41), நாகஸ்ரீ (35), மோமி (30), ஆகியோர் காயமடைந்தனர். பலராம் கிருஷ்ணன் (31), நவ்யா (25), ஸ்ரீனிவாஸ் (67) ஆகியோர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர்.
அறிக்கை: எங்கள் புரூக்ஃபீல்ட் கிளையில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். அதிகாரிகள் மற்றும் போலீசாரின் விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைக்கிறோம்," என்று கஃபே வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கஃபேயின் இணை நிறுவனர் திவ்யா ராகவேந்திர ராவ், காயமடைந்தவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.. எங்கள் சிந்தனை முழுக்க காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன, மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து ஆதரவு, உதவி மற்றும் கவனிப்பை நாங்கள் வழங்குவோம், மேலும் அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம், என்று கூறினார்.
ராமேஸ்வரம் கஃபே உரிமையாளர்களான ராகவேந்திர ராவ் மற்றும் திவ்யா ராகவேந்திர ராவ் யார்?
ராகவேந்திர ராவ் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆவார், அவர் உணவுத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். அவர் ஐடிசி கிச்சனின் நிறுவனர் மற்றும் விளம்பரதாரர் ஆக பணியாற்றினார். அவர் ராமேஸ்வரம் கஃபே சங்கிலியில் செயல்பாடுகளை தற்போது கவனித்து வருகிறார். .
திவ்யா ராகவேந்திர ராவ் ஒரு தகுதி வாய்ந்த பட்டய கணக்காளர் ஆவார். ஐஐஎம் அகமதாபாத்தில் நிதி மற்றும் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ராமேஸ்வரம் கஃபேயின் மேலாண்மை மற்றும் நிதித் துறைக்கு அவர் தலைமை தாங்குகிறார்.
இருவரும் கணவன் - மனைவி. திவ்யா ராகவேந்திர ராவ் 12 ஆண்டுகளுக்கும் மேலான பணி அனுபவம் உள்ளவர் என நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ICAI இன் தென்னிந்திய பிராந்திய கவுன்சிலின் பெங்களூரு கிளையின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
என்ன நடந்தது?: பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டுவெடிப்புதான் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தகவல் வெளியிட்டு உள்ளார். பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில், ஓட்டலுக்கு சாப்பிட வருவது போல வந்த வாடிக்கையாளர் ஒருவர்... தான் கையோடு கொண்டு வந்த பையை ஓட்டலில் வைத்து விட்டு சென்றதாகவும், அவர் விட்டு சென்ற பை ஒன்றில் இருந்த பொருள்தான் வெடித்ததாக முதல் கட்ட புகார்கள் தெரிவிக்கின்றான்.
சிசிடிவியில் குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்து உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் சுமார் 28 முதல் 30 வயதுடையவர் என்று அவர் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் ஓட்டலில் ரவா இட்லிக்கான கூப்பனை எடுத்துக் கொண்டார், ஆனால் சாப்பிடாமல் சென்றுவிட்டார்.
ஐஇடி இருந்ததாகக் கூறப்படும் தனது பையை அவர் விட்டுச் சென்றார் என்று துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார். . வெடித்தது மிக வீரியமிக்க IED வெடிகுண்டு என போலீசார் கூறுகின்றனர். தீவிர விசாரணை நடந்து வருகின்றது என்று துணை முதல்வர் டிகே சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.. இந்த குண்டு வெடிப்பில் 8 பேர் காயமடைந்துள்ளனர்
பையில் இருந்ததைத் தவிர, வளாகத்தில் ஐஇடி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று காவல்துறை முதலமைச்சரிடம் கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications