Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நோ சிக்னல்.. சந்திரயான் 3 லேண்டர், ரோவரை தொடர்பு கொள்வதில் சிக்கல்.. இஸ்ரோ தீவிர முயற்சி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வுகளை முடித்துக்கொண்டு உறக்க நிலைக்கு சென்றிருக்கும் சந்திரயான் 3 பிரக்யான் ரோவரை மீண்டும் உயிர்ப்பிக்கும் பணிகள் தொடங்கி வருகின்றன. இந்நிலையில் லேண்டரையும், ரோவரையும் தொடர்புகொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ கூறியுள்ளது.

நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. 312 நாட்களாக நிலவை 3,400 சுற்றுகளை சுற்றிய பின்னர்தான் இதை சந்திரயான் 1 உறுதி செய்தது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

Chandrayaan 3 failed to communicate with lander and rover, says ISRO

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் கட்டுப்பாட்டை இழந்து நிலவில் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

திட்டமிட்டபடி தனது வேலையை முடித்துக்கொண்ட பிரக்யான் ரோவர், தற்போது உறக்க நிலையில் இருக்கிறது. இதனை மீண்டும் எழுப்பும் பணிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன. நிலவை பொறுத்த அளவில் பகலில் 175 டிகிரி செல்ஸியல் வெப்பம் பதிவாகி இருக்கும். இது கொதிநிலையை விட அதிகம். இருப்பினும் இந்த வெப்பத்திலிருந்து ரோவரின் கருவிகளை பாதுகாக்க சில வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால், குளிரிருந்து ரோவரை காக்க நாம் எதையும் செய்யவில்லை. கடந்த 21ம் தேதியுடன் நிலவில் இரவு காலம் முடிவடைந்தது.

21ம் தேதி காலை 10.45 மணியளவில் நிலவில் சூரியன் உதிக்க தொடங்கியது. அன்று முதல் விஞ்ஞானிகள் ரோவரையும், லேண்டரையும் எழுப்ப முயன்று வருகின்றனர். இன்று எப்படியாவது இரண்டையும் எழுப்பிவிடலாம் என்று விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்த நிலையில், இந்த முயற்சி நாளை தள்ளி போயுள்ளது. அதேபோல லேண்டரையும், ரோவரையும் தொடர்புகொள்ள முடியவில்லை என இஸ்ரோ அறிவித்துள்ளது.

அதாவது, "விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் விழித்திருக்கும் நிலையை அறிய, அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை அவர்களிடமிருந்து எந்த சிக்னலும் வரவில்லை. தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் தொடரும்" என்று இஸ்ரோ x சோஷியல் மீடியா தளத்தில் கூறியுள்ளது.

இது குறித்து அறிவியல் வட்டாரங்களில் விசாரிக்கையில், "ரோவரும், லேண்டரும் இன்று உயிர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். இன்று காலை நிலவில் ரோவர் இருக்கும் தென் துருவத்தில் 20 டிகிரி அளவு சூரியன் மேலே வந்திருக்கும். இதே நாளை 40 டிகிரிக்கு மேல் வந்திருக்கும். இப்படி இருக்கையில் இன்று தவறிவிட்டால் அடுத்தடுத்த நாட்களில் அதை உயிர்ப்பிப்பது கடினமாகிவிடும். இதனால் நமக்கு இழப்பு ஏதும் கிடையாது" என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+