மேகதாது அணை கட்ட ரூ. 9,000 கோடி நிதி ஒதுக்கீடு: கர்நாடகா காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
பெங்களூர்: காவிரியின் குறுக்கே தமிழ்நாட்டுக்கு எதிராக மேகதாது அணை கட்டுவதற்கு ரூ. 9,000 கோடி நிதி ஒதுக்குவோம் என கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகளை பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ் வெளியிட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ரூ. 9,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்வோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மேகதாது அணை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா பல ஆண்டுகளாக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசும் அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கர்நாடகாவில் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் மூன்றுமே மேகதாது அணை விவகாரத்தில் ஒன்றாக நிற்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவகுமார், மேகதாது அணை கட்டுவதற்கான பாதயாத்திரை நடத்தினார். இதற்கு பதிலடியாக மேகதாது அணை கட்ட ரூ9,000 கோடி நிதி ஒதுக்கீடு என கர்நாடகா பட்ஜெட்டில் பாஜக அறிவித்தது. தற்போது காங்கிரஸ் ஒரு படி மேலேபோய் தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்ட ரூ9,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்வோம் என்கிறது.












Click it and Unblock the Notifications