Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் திட்டம்.. நான் விடவே மாட்டேன்.. கர்நாடகாவில் மோடி ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கும் காங்கிரசின் திட்டத்தை அமல்படுத்த நான் விட மாட்டேன் என்று பிரதமர் மோடி கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பேசுகையில் கூறினார்.

முதல் மற்றும் 2 ஆம் கட்ட லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில், இன்னும் 5 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 3 ஆம் கட்ட லோக்சபா தேர்தல் வரும் மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், பிரதமர் மோடி கர்நாடகாவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Congress plan to give reservation on religious basis I will not let this happen say PM Modi


பாகல்கோட்டையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அரசியல் அமைப்பை மாற்றி எஸ்சி, எஸ்டிக்களின் உரிமையை பறிக்க போவதாக காங்கிரஸ் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்கள் காங்கிரஸ் கட்சியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இனி தாலியை அடகு வைக்க வேண்டாம்.. பெண்களுக்கு ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு! ராகுல் காந்தி உறுதி


அம்பேத்கர், அரசியல் சாசனம் உங்களுக்கு வழங்கிய உரிமையை பறித்து மத அடிப்படையில் உங்களின் வாக்கு வங்கியை பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்கிறது. நாடாளுமன்றத்தில் உள்ள பாஜக எம்பிக்களில் எஸ்சி, எஸ்டி ஓபிசி பிரிவுகளை சேர்ந்தவர்கள் தான் அதிகம். சிறுபான்மையினரின் நம்பிக்கையை பெற எஸ்சி, எஸ்சி, பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டை பறித்து சிறுபான்மையினருக்கு வழங்க காங்கிரசார் விரும்புகிறார்கள்.

இதை நீங்கள் அனுமதிப்பீர்களா?.. நான் இந்த மக்களுக்கு ஒரு உத்தரவாதத்தை அளிக்க விரும்புகிறேன், அதாவது மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கும் காங்கிரசின் திட்டத்தை அமல்படுத்த நான் விட மாட்டேன். உங்களின் உரிமை, உங்களின் இட ஒதுக்கீட்டை காக்க நான் எந்த உச்சத்திற்கும் செல்வேன். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் டெக்னாலஜியை பயன்படுத்தி போலியான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். இவ்வாறு மோடி பேசினார்.

3-ம் கட்ட லோக்சபா தேர்தல் வரும் மே 7 ஆம் தேதி நடைபெறுகிறது. 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதில், கர்நாடகாவில் 14 தொகுதிகளும் அடங்கும். இதனால் அங்கு தீவிர பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+