மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் திட்டம்.. நான் விடவே மாட்டேன்.. கர்நாடகாவில் மோடி ஆவேசம்
பெங்களூர்: மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கும் காங்கிரசின் திட்டத்தை அமல்படுத்த நான் விட மாட்டேன் என்று பிரதமர் மோடி கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பேசுகையில் கூறினார்.
முதல் மற்றும் 2 ஆம் கட்ட லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில், இன்னும் 5 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 3 ஆம் கட்ட லோக்சபா தேர்தல் வரும் மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், பிரதமர் மோடி கர்நாடகாவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பாகல்கோட்டையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அரசியல் அமைப்பை மாற்றி எஸ்சி, எஸ்டிக்களின் உரிமையை பறிக்க போவதாக காங்கிரஸ் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்கள் காங்கிரஸ் கட்சியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இனி தாலியை அடகு வைக்க வேண்டாம்.. பெண்களுக்கு ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு! ராகுல் காந்தி உறுதி
அம்பேத்கர், அரசியல் சாசனம் உங்களுக்கு வழங்கிய உரிமையை பறித்து மத அடிப்படையில் உங்களின் வாக்கு வங்கியை பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்கிறது. நாடாளுமன்றத்தில் உள்ள பாஜக எம்பிக்களில் எஸ்சி, எஸ்டி ஓபிசி பிரிவுகளை சேர்ந்தவர்கள் தான் அதிகம். சிறுபான்மையினரின் நம்பிக்கையை பெற எஸ்சி, எஸ்சி, பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டை பறித்து சிறுபான்மையினருக்கு வழங்க காங்கிரசார் விரும்புகிறார்கள்.
இதை நீங்கள் அனுமதிப்பீர்களா?.. நான் இந்த மக்களுக்கு ஒரு உத்தரவாதத்தை அளிக்க விரும்புகிறேன், அதாவது மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கும் காங்கிரசின் திட்டத்தை அமல்படுத்த நான் விட மாட்டேன். உங்களின் உரிமை, உங்களின் இட ஒதுக்கீட்டை காக்க நான் எந்த உச்சத்திற்கும் செல்வேன். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் டெக்னாலஜியை பயன்படுத்தி போலியான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். இவ்வாறு மோடி பேசினார்.
3-ம் கட்ட லோக்சபா தேர்தல் வரும் மே 7 ஆம் தேதி நடைபெறுகிறது. 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதில், கர்நாடகாவில் 14 தொகுதிகளும் அடங்கும். இதனால் அங்கு தீவிர பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
-
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி











Click it and Unblock the Notifications