ஜூலை 2ல் கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவகுமார் பதவியேற்பு.. விழாவுக்கு அனுமதிக்காத கர்நாடக அரசு
பெங்களூர்: ஜூலை மாதம் 2ம் தேதி கர்நாடக காங்கிரஸ் தலைவராக பதவியேற்கிறார் டி.கே.சிவக்குமார். ஆனால் இந்த விழாவிற்கு கர்நாடக அரசு அனுமதி தராமல் இழுத்தடித்து வருகிறது.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக, முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான டி.கே.சிவக்குமார் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் விமரிசையாக அவரால் விழா நடத்தி பதவியேற்க முடியவில்லை. கட்சி தலைவராக பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு டி.கே.சிவக்குமார் 2 முறை அனுமதி கேட்டபோதிலும், எடியூரப்பா அரசு, 2 முறையும் அனுமதி தர மறுத்துவிட்டது.
கர்நாடக அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டினார். ஆனால், பர்சனல் நண்பரான சிவகுமாருக்கு, பன்சனலாகவே போன் போட்டுள்ளார் எடியூரப்பா.
சென்னை மாதிரி கர்நாடகாவில் ஊரடங்கா.. நெவர்.. பொருளாதாரத்தை மீட்பதே எங்கள் இலக்கு- எடியூரப்பா அதிரடிban
உங்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு அரசின் ஆட்சேபனை கிடையாது என்றும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நிகழ்ச்சியை நடத்துங்கள் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார்.
எனவே, ஜூலை மாதம் 2ம் தேதி பதவி ஏற்பு விழாவை நடத்த டி.கே.சிவக்குமார் முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அவர் தொடங்கி உள்ளார். ஆனால், இந்த பதவி ஏற்பு விழாவை நடத்துவதற்கு கர்நாடக அரசு இன்னும் எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்கவில்லை. இதனால் இன்னும் பரபரப்புதான் நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications