கொரோனா பீதி ஓய்வதற்குள்.. பெங்களூரில் பரவுகிறது பன்றிக்காய்ச்சல்.. 2000 பேரை பலிவாங்கிய கொடிய நோய்
Recommended Video
பெங்களூர்: ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் SAP. இதன் கிளைகள், மும்பை, பெங்களூர் மற்றும் குர்கான் நகரங்களில் செயல்பட்டு வருகிறது. ஆனால், அதில்தான் ஒரு சிக்கல். பெங்களூர் அலுவலகத்தில் பணியாற்றும் இரு ஊழியர்களுக்கு கட்டுப்படுத்த முடியாத காய்ச்சல் திடீரென ஏற்பட்டது.
அவர்கள் சாதாரண காய்ச்சல் மாத்திரை எடுத்துக்கொண்டும் காய்ச்சல் விடுவதாக இல்லை. இதையடுத்து, அவர்கள், ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டன.
அப்போதுதான், அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் என்று பொதுவாக அழைக்கப்படக் கூடிய H1N1 வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தங்கள் ஆபீசுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.

ஆபீஸ் மூடல்
இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவக்கூடியது என்பதால், அலுவலக நிர்வாகம் அதிரச்சியடைந்தது. ஒருத்தரும் ஆபீசுக்கு வர வேண்டாம்ப்பா. வீட்டில் இருந்து ஒர்க் பிரம் ஹோம் பார்த்தாலே போதும் என கூறிவிட்டதாம். பிப்ரவரி 20 முதல் 28ம் தேதிவரை, ஊழியர்கள் ஆபீஸ் வர வேண்டாம் என அறிவுறுத்தியதோடு, ஆபீஸ் முழுக்க, சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறதாம்.

அறிகுறி
பெங்களூர் மட்டுமல்ல, மும்பை மற்றும் குர்கான் நகரங்களில் உள்ள அலுவலகங்களிலும் சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. அனைத்து ஊழியர்களும் வீட்டிலிருந்து பணியாற்ற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். "உங்களில் யாராவது அல்லது உங்கள் குடும்பத்தினருக்கு சளி அறிகுறிகள் இருந்தால், காய்ச்சலுடன் இருமலும் இருந்தால் மருத்துவ ஆலோசனையைப் பெறவும்." என்று SAP அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

2000 பேர்
உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கைப்படி, எச்1 என்1 அறிகுறிகளில் காய்ச்சல், சளி மற்றும் தொண்டை புண் ஆகியவை அடங்கும். பன்றிக்காய்ச்சல் என்பது எச்1என்1 வைரஸால் பரவும் நோயாகும், இது பொதுவாக குளிர்காலத்தில் இந்தியாவைத் தாக்கும். 2014-15 ஆம் ஆண்டில், 31000 க்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்ப்டடனர். இந்தியாவில் அப்போது, 2000க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்த கொடிய வியாதி இது.

முன்னெச்சரிக்கை
சீனாவிலிருந்து உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், பெங்களூரில் எச்1என்1 நோய் பரவியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக N95 வகை மாஸ்க் பயன்படுத்துவது பன்றிக்காய்ச்சல் வைரஸ் பரவுவதை தடுக்கும். வெயில் காலம் ஆரம்பித்ததும், அந்த நோய் தாக்கம் குறைந்துவிடும் அல்லது முற்றிலும் ஒழிந்துவிடும் என்பதால், மக்கள் அதுவரை முன்னெச்சரிக்கையாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications