மொத்த தங்க நகையும் போச்சு.. அப்படியே தூக்கிய கர்நாடக போலீஸ்.. வெறும் கையோடு வெளிவரும் ஹரி நாடார்
பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஹரி நாடாருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இன்னும் இரு நாட்களில் வெளியே வர இருக்கும் நிலையில், ஹரி நாடார் அணிந்திருந்த தங்க நகைகளை கர்நாடக போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தைக்குளத்தைச் சேர்ந்தவர் ஹரி நாடார். இவர் சென்னையில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். கழுத்து, கை, விரல்கள் என உடல் முழுவதும் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து கொண்டு ஹரி நாடார் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். இந்த வித்தியாசமான கெட்டப் மூலம் மக்கள் நடமாடு தங்க நகைக் கடை என்ற அளவுக்கு பேசப்பட்டார்.

ராக்கெட் ராஜாவின் பனங்காட்டுப்படை கட்சியில் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட ஹரி நாடார், தேர்தலிலும் போட்டியிட்டார். கடந்த 2019 ஆண்டு நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது பனங்காட்டுப்படை கட்சி சார்பாக போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்து ஆச்சர்யப் பட வைத்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இவர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டார்.
சிறையில் ஹரி நாடார்: சுயேட்சை வேட்பாளராக ஹரி நாடார் போட்டியிட்டு 37,726 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். தமிழகத்தில் சுயேட்சை வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்றவராக ஹரி நாடார் இருந்தார். இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வந்த சில நாட்களிலேயே, பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஒரு குற்ற வழக்கில் ஹரி நாடாரை கைது செய்தனர்.
பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஹரி நாடார் மீது தமிழக போலீசாரும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். நடிகை விஜயலட்சுமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கிலும் ஹரி நாடாருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது. அடுத்தடுத்து ஹரி நாடார் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் அவர் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருந்து வந்தார்.
ஹரி நாடாருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்: மற்ற வழக்குகளில் ஹரி நாடாருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும், பண மோசடி வழக்கில், ஹரி நாடாருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டிருந்ததால், அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலேயே கடந்த 34 மாதங்களாக இருந்து வருகிறார். இந்த நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி ஹரி நாடார் விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்று பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றம், ஹரி நாடாருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.
நகைகள் அனைத்தும் பறிமுதல்: 34 மாதங்களாக சிறையில் உள்ள ஹரி நாடார் ஜாமீனில் விடுதலையாக உள்ளார். இதனிடையே, கிலோ கணக்கில் நகைகளுடன் வலம் வந்த ஹரி நாடாரின் மொத்த நகையும் தற்போது கர்நாடக போலீசார் பறிமுதல் செய்துள்ளார்களாம். ஹரிநாடாரின் நகைகள் அனைத்தும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால், கழுத்து, கைகள், தெரியாத அளவுக்கு நகைகளை அணிந்து கொண்டு வலம் வந்த ஹரி நாடாரை தங்க ஆபரணமே இன்றி வெளியில் விட போகிறதாம். இன்னும் இரு தினங்களில் சிறையில் இருந்து ஹரி நாடார் விடுதலை செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications