கர்நாடகாவில் பகீர்! ஜெயின் துறவியை கொன்று.. துண்டு துண்டாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் வீசிய கொடூரம்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் ஜெயின் துறவி ஒருவர் நள்ளிரவில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம் மாவட்டம் ஹிரேகோடி கிராமத்தில் நந்திபர்வத மடம் என்ற மடம் ஒன்று இருக்கிறது. அது ஜெயின் மதத்திற்குச் சொந்தமான ஆசிரமம் ஆகும். சுற்றியுள்ள ஜெயின் மக்கள் பலரும் இங்கே வருவார்கள்.
இந்த மடத்தில் ஜெயின் துறவியாக ஆச்சார்யா ஸ்ரீ 108-வதுகாமகுமார நந்தி மகாராஜா என்பவர் இருந்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், திடீர் திருப்பம் அரங்கேறியுள்ளது..

ஜெயின் துறவி: அங்கே உள்ளூரில் ஜெயின் மதத்தினர் மத்தியில் ரொம்பவே புகழ்பெற்ற துறவிகளில் ஒருவராக இருந்தவர் ஆச்சார்யா காமகுமார் நந்தி மகாராஜ். இவர் கடந்த 15 ஆண்டுகளாகவே அதே இடத்தில் தான் இருந்து வந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை வழக்கம் போல மடத்தில் தனது பணிகளைச் செய்து வந்துள்ளார். அன்றைய தினம் இரவு வழக்கம் போல அவர் தனது அறைக்கு திரும்பியுள்ளார்.
இருப்பினும், மறுநாள் அவரை தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. திடீரென அவர் மாயமாகியிருந்தார். இதனை அங்கு வந்த அவரது பக்தர்கள் கவனித்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை தேடியுள்ளனர். அங்கே எங்குத் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், இது தொடர்பாக அவர்கள் சிக்கோடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.
துண்டு துண்டாக வெட்டி: இதற்கிடையே மாயமான அந்த ஜெயின் துறவி ஆச்சார்யா காமகுமார் நந்தி மஹராஜின் உடல் நேற்று சனிக்கிழமை மாலை பெல்காம் மாவட்டத்தில் உள்ள கடக்பாவியில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும், அவரது உடலை வெட்டி அங்கிருந்த 400 அடி ஆழ்துளைக் கிணற்றிலும் வீசியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து 2 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அங்குள்ள கடக்பாவி கிராமத்தைச் சேர்ந்த ஹசன் தலயத் மற்றும் நாராயண் மாலி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து துறவியைக் கொன்று, அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஆழ்துளைக் கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அந்த துறவியிடம் இருந்து இருவரும் கடன் வாங்கியுள்ளனர். கொடுத்த கடனை அந்த துறவி திரும்பக் கேட்ட நிலையில், அப்போது ஏற்பட்ட மோதலில் இருவரும் இணைந்து இந்த கொடூர கொலையைச் செய்துள்ளனர்.

என்ன நடந்தது: வழக்கு விசாரணையின் போது கடக்பாவி கிராமத்திற்கு நேரடியாகச் சென்ற போலீசார், இரவு முழுவதும் அங்குச் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் பாட்டீல் மற்றும் தடயவியல் அதிகாரிகள் உடனிருந்தனர். அந்த ஜெயின் துறவி மாயமானதற்கு முந்தைய நாளில் ஆசிரமத்திற்குச் சென்ற அனைத்து பொதுமக்களின் தகவல்களையும் அதிகாரிகள் சேகரித்து விசாரணை நடத்தினர். அப்போது தான் இந்த இருவர் மீது அதிகாரிகளுக்குச் சந்தேகம் வந்துள்ளது.
இதையடுத்து இருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். போலீசார் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாகப் பதில் சொன்னதால் சந்தேகம் அதிகரித்துள்ளது. போலீசார் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்திய நிலையில், துறவியைக் கொலை செய்ததை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications