Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“சுட்டுக் கொல்வோம்”.. கர்நாடகாவில் இந்து பற்றி தவறாக பேசினால் “யோகி மாடல்” -பாஜக எம்எல்ஏ பரபர பேச்சு

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகாவில் இந்து மதம் பற்றியோ, இந்தியா பற்றியோ தவறாக பேசினால் சுட்டுக்கொல்வோம் என்று பாஜக எம்.எல்.ஏ. பசனகவுடா பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜயபுரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்து இருக்கிறார்.

கர்நாடகாவில் இன்னும் 8 நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க பிரச்சாரம் செய்து வருகிறது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி மாநில கட்சியின் ஆட்சியை கர்நாடகாவில் அமைக்க முயன்று வருகிறது.

If you speak about Hindus you will be encountered - Karnataka bjp MLA Basangouda Patil Yatnal

அதே நேரம் ஆளும் பாஜக கர்நாடகாவில் ஆட்சியை தக்கும் வைக்க முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக பல்வேறு வியூகங்களை கையில் எடுத்து அக்கட்சி செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு மூலம் புதிய திட்டங்களை தொடங்கி வைப்பது, மாநில அரசின் புதிய உத்தரவுகள் என பல்வேறு நடபடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள், முன்னணி பேச்சாளர்கள் என பல்வேறு தரப்பினர் பிரச்சாரத்தில் களமிறங்கி இருக்கிறார்கள். இதில் சில தலைவர்களின் பேச்சுக்கள் பெரும் சர்ச்சைகளையும் கிளப்பி வருகின்றன. அந்த வகையில்தான் தற்போது பாஜக எம்.எல்.ஏ பேச்சும் அமைந்து இருக்கிறது.

If you speak about Hindus you will be encountered - Karnataka bjp MLA Basangouda Patil Yatnal

விஜயபுராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா, உத்தரப்பிரதேச சமாஜ்வாடி முன்னாள் எம்பி அதீக் அகமது, அவரது சகோதரர் மற்றும் மகன் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி பேசினார். அப்போது அவர், "நீங்கள் எங்கள் நம்பிக்கை பற்றியோ, இந்தியா அல்லது இந்துக்கள் பற்றியோ தவறாக பேசினால் சுட்டுக்கொல்வோம். சிறையில் அடைக்க மாட்டோம்.

சாலையில் என்கவுண்டர் நடக்கும். யோகி ஆதித்நாத் மாடல் அரசை கர்நாடகாவில் அமைப்போம். அனைத்து முடிவுகளையும் சாலையிலேயே எடுப்பொம்." என்று தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்கவுண்டர் என்பது சட்டவிரோதமான செயலாக பார்க்கப்படும் சூழலில் பாஜக எம்.எல்.ஏவே அதை ஊக்குவிக்கும் வகையில் பேசி இருப்பது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+