இந்தியாவில் தொடரும் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு- மொத்த எண்ணிக்கை 170 ஆக அதிகரிப்பு!
பெங்களூரு: கேரளாவில் மேலும் 4 பேருக்கு இன்று ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இந்தியா முழுவதும் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 170 ஆக உயர்ந்திருக்கிறது. இன்று மட்டும் 9 பேருக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பிறநாடுகளை ஒப்பிடுகையில் கணிசமாக குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,563 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று மட்டும் 132 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் இந்தியாவில் 82,267 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையானது கடந்த 572 நாட்களில் மிக குறைவானது. இதனிடையே ஓமிக்ரான் எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது.
கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு இன்று ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. உடுப்பியில் 2 பேருக்கும் தார்வார்ட், பத்ராவதி, மங்களூருவில் தலா ஒருவருக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் மட்டும் மொத்தம் 19 பேருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் கேரளாவில் இன்று 4 பேருக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 170 ஆக அதிகரித்திருக்கிறது. மாநிலங்கள் வாரியாக ஓமிக்ரான் பாதிப்பு நிலவரம்: மகாராஷ்டிரா- 54; டெல்லி- 26; ராஜஸ்தான் -17; கர்நாடகா- 19; தெலுங்கானா- 20; குஜராத்-11; கேரளா-15; ஆந்திரா-1; சண்டிகர்-1; தமிழ்நாடு-1; மேற்கு வங்கம்-4; உ.பி.-2












Click it and Unblock the Notifications