Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எஸ்கேப்பான பிரஜ்வல்.. தந்தை ரேவண்ணா அதிரடி கைது.. மாஜி பிரதமர் தேவகவுடாவின் வீட்டில் தூக்கிய எஸ்ஐடி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெண்ணை கடத்தி சிறை வைத்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா எம்எல்ஏவின் மனு தள்ளுபடியான நிலையில் அவரை எஸ்ஐடி போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று கைது செய்தனர். பெங்களூரில் உள்ள தேவகவுடாவின் இல்லத்தில் நுழைந்து ரேவண்ணாவை தூக்கிய சம்பவம் போலீசார் அழைத்த சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா ஜேடிஎஸ் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இவரது மூத்த மகன் ரேவண்ணா ஹாசன் மாவட்டம் ஹோலேநரசிப்புரா எம்எல்ஏவாக உள்ளார். ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் எம்பியாக உள்ளார்.

JDS leader HD Revanna taken into custody by SIT officials in connction with a kidnapping case

பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். அவரது ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் ஜெர்மனி சென்றுவிட்டார். இந்த ஆபாச வீடியோ தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே தான் ரேவண்ணா வீட்டில் வேலை செய்த பணிப்பெண் ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் மீது பாலியல் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரையும் விசாரணைக்கு அழைத்து எஸ்ஐடி நோட்டீஸ் வழங்கி உள்ளது. ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதற்கிடையே தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண் ஒருவரை விசாரணைக்கு செல்ல விடாமல் ரேவண்ணா கடத்தி சிறை வைத்ததாக மைசூர் மாவட்டம் கேஆர் நகர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது ரேவண்ணாவுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ரேவண்ணா மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று விசாரணை நடத்திய நீதிமன்றம் அந்த மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்தது. இதையடுத்து இன்று மாலையில் ரேவண்ணா பெங்களூர் பத்மநாபநகரில் உள்ள தனது தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் இல்லத்தில் இருந்தார். இதுபற்றி அறிந்த போலீசார் தேவகவுடாவின் இல்லத்துக்குள் நுழைந்து ரேவண்ணாவை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

இந்த விசாரணையின் முடிவில் ரேவண்ணா கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. அதன்படி இரவில் ரேவண்ணாைவை எஸ்ஐடி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரது மகன் பிரஜ்வல் தொடர்ந்து வெளிநாட்டில் உள்ளார். அவரை போலீசார் தேடிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+