அய்யய்யோ தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் போகுதே- பெங்களூரில் தண்ணீர் பஞ்சம்..பாஜக தேஜஸ்வி சூர்யா ஒப்பாரி
பெங்களூர்: காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகா அரசு திறந்துவிட்டிருப்பதால் பெங்களூருக்கு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுவிட்டதாக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா குமுறியுள்ளார்.
காவிரியில் தமிழ்நாடு அரசு தமக்கான பங்கான 24,000 கன அடி நீரை கேட்டது. ஆனால் கர்நாடகா அரசு இதனைத் தர மறுத்தது. இதனையடுத்து நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடிநீரை திறக்க உத்தரவிட்டப்பட்டது. இதனையும் கர்நாடகா ஏற்கவில்லை.

இதனால் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்துக்கு போனது. உச்சநீதிமன்றமும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை செயல்படுத்த கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகாமோ, போனால் போகிறதென சொற்ப நீரை திறந்துவிட்டது.
இதன்பினர் தமிழ்நாடு அரசு 12,500 கன அடி நீரை கேட்டது. இப்போதும் கர்நாடகா எதிர்த்தது. காவிரி ஒழுங்காற்று குழு வினாடிக்கு 3,000 கன அடிநீர் வீதம் 18 நாட்களுக்கு காவிரி நீரை திறந்துவிட சொன்னது. இதனையும் ஏற்க முடியாது; ஒரு சொட்டு நீரைக் கூட காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தர முடியாது என்கிறது கர்நாடகா.
இதனிடையே மண்டியா பந்த், பெங்களூர் பந்த், கர்நாடகா பந்த் என வரிசையாக கன்னட அமைப்புகளும், கன்னட விவசாயிகளும் போராட்டம் நடத்துகின்றனர். கர்நாடகாவில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கின்றன. ஆளும் கர்நாடக காங்கிரஸ் அரசும் போராட்டங்களை ஒடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது.
இன்றும் கர்நாடகா தழுவிய பந்த் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெங்களூரில் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்புகளின் தலைவர்கள் மறியல் போராட்டம் நடத்தி கைதாகினர். தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளியிலும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பெங்களூர், மைசூரில் 144 தடை உத்தரவு அமலில் இருந்த போதும் இந்த போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் பெங்களூரில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட்டுவிட்டது. தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் போகுமானால் பெங்களூர் மாநகரத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு முன்பாக கர்நாடகா அரசு தமது நிலையை தெரிவிக்க தவறிவிட்டது என்றார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications