கர்நாடகா முதல்வரின் வீட்டு அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா ...தனிமையில் எடியூரப்பா!!
பெங்களூரு: கர்நாடகா மாநில முதல்வரின் வீட்டு அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதை அடுத்து முதல்வர் எடியூரப்பா தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். வீட்டில் இருந்தே அலுவல்களை கவனிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு அவரது வீட்டில் தனி அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகம் கிருஷ்ணா என்று அழைக்கப்படுகிறது. இந்த அலுவலகம் கடந்த மாத இறுதியில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக மூடப்பட்டது. அலுவலகம் முழுவதும் இரண்டு முறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூலை 2ஆம் தேதி திறக்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்குப் பின்னர் அப்போதுதான் முதல்வர் எடியூரப்பா அலுவலகம் வந்தார்.

இந்த நிலையில் இன்று அதே அலுவலகத்தில் இருக்கும் முதல்வரின் ஸ்பேர் டிரைவர், பைலட் ஸ்டாப் மற்றும் விதான் சவுதான் தலைமைச் செயலகத்தில் இருக்கும் ஊழியர் என்று பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து முதல்வர் வெளியிட்டு இருக்கும் பத்திரிகை குறிப்பில், ''நான் நலமாக இருக்கிறேன். பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எனது அதிகாரபூர்வ வீடான காவேரியில் இருந்து அலுவல்களை கவனிப்பது என்று முடிவு செய்து இருக்கிறேன். வீடியோ கான்பரன்சிங் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உத்தரவுகளை பிறப்பிப்பேன்.
மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா தொற்றை விரட்டியடிக்க வேண்டும். மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
முதல்வர் தனது அதிகாரபூர்வ இல்லத்திற்கு மாறுவதை அடுத்து உடனடியாக அவரது காவேரி இல்லத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் வெளியிட்டு இருக்கும் முதல்வரின் அரசியல் செயலாளர் ரேணுகாசார்யா வெளியிட்டு இருக்கும் செய்தியில், முதல்வர் நலமாக இருக்கிறார். தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் சமீபத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை பெங்களூருவில் 1,373 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டு இருந்தது. கர்நாடகா மாநிலத்தில் இதுவரை 31,105 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 486 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கர்நாடகாவில் புதிதாக 2,228 கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications