பெலகாவி யாருக்கு சொந்தம்? கர்நாடகா- மகாராஷ்டிரா முதல்வர்கள் மீண்டும் கடும் மல்லுக்கட்டு
பெங்களூரு/மும்பை: கர்நாடகா - மகாரஷ்டிரா எல்லை பகுதியான பெலகாவியை முன்வைத்து இரு மாநில முதல்வர்களான எடியூரப்பாவும் உத்தவ் தாக்கரேவும் மல்லுக்கட்டி வருகின்றனர்.
முந்தைய மும்பை மாகாணத்தின் ஒருபகுதியாக இருந்தவை பெலகாவி மற்றும் அதனை சுற்றிய பகுதிகள் என்பது மகாராஷ்டிராவின் கருத்து. கர்நாடகா எல்லையில் மராத்தி மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்பது நீண்டகால சர்ச்சை.
இந்த பின்னணியில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், கர்நாடகா ஆக்கிரமித்திருக்கும் மராத்தி மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைப்பதே எல்லை போராளிகளுக்கான உண்மையான அஞ்சலி என குறிப்பிட்டிருந்தார்.

உத்தவ் தாக்கரேவின் இந்த கருத்துக்கு கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கூறிய எடியூரப்பா, உத்தவ் தாக்கரேவின் கருத்து நல்லிணக்கத்துடன் வாழும் மக்களிடையே பெரும் வலியை ஏற்படுத்தியுள்ளது. உத்தவ் தாக்கரே உண்மையான இந்தியராக இருந்தால் கூட்டாட்சி முறைக்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் கர்நாடகாவில் கன்னடர்களுடன் மராத்தி மொழி பேசும் மக்கள் நல்லிணக்கமாக அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். அதேபோல் மகாராஷ்டிரா மாநில எல்லையில் வசிக்கும் கன்னடர்களும் மராத்தி மொழி பேசும் மக்களுடன் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் உத்தவ் தாக்கரே பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. கர்நாடகாவின் ஒரு அங்குலம் நிலத்தை கூட எப்போதும் விட்டுத்தரமாட்டோம் என்றார் எடியூரப்பா.
ஏற்கனவே தமிழகத்தின் தாளவாடி கர்நாடகாவுக்கு சொந்தம் என வாட்டாள் நாகராஜ் போன்றவர்கள் அடாவடித்தனம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications