கர்நாடகாவில் ஜேடிஎஸ்- உடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்க தயங்கமாட்டோம்- மல்லிகார்ஜூன கார்கே
பெங்களூர்: கர்நாடகாவில் ஜேடிஎஸ் உடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி தயங்காது என அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சூசகமாக தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் இந்துத்துவா கொள்கையை முன்வைக்கும் சிவசேனாவுடன் காங்கிரஸ்- என்சிபி இணைந்து ஆட்சி அமைத்துள்ளன. இதனையடுத்து நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்க சிவசேனா முயற்சித்து வருகிறது.

கோவாவில் பாஜகவால் கழற்றிவிடப்பட்ட ஜிஎஃப்பி கட்சியுடன் சிவசேனா கை கோர்த்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் 5-ந் தேதி நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் பாஜக குறைந்தது 6 தொகுதிகளிலாவது வென்றால்தான் பெரும்பான்மை கிடைக்கும். இல்லையெனில் ஆட்சி கவிழும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் இன்று பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க, மதச்சார்பற்ற கொள்கையை வலிமைப்படுத்த வேண்டிய சூழ்நிலை வரும் போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி சரியான முடிவை எடுப்போம் என்றார்.. மேலும் 15 தொகுதிகளிலும் வெல்வது எங்கள் இலக்கு. டிசம்பர் 9-ந் தேதிதான் கர்நாடகா அரசியல் குறித்த ஒரு தெளிவான நிலை தெரியவரும். நிச்சயம் நல்ல செய்தி வரும். காத்திருங்கள் என்றார்.
மேலும் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க சோனியா காந்தி விரும்பவில்லை. எதிர்க்கட்சி வரிசையில் அமரத்தான் அவர் விரும்பினார். ஆனால் பாஜகவை அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற சிவசேனாவை ஆதரிக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்ததால் சோனியா காந்தி ஒப்புக் கொண்டார். சோனியாவிடம் இடதுசாரிகள் உள்ளிட்ட பிறகட்சித் தலைவர்கள் வலியுறுத்தியதால் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கலாம் என சோனியா முடிவெடுத்தார் என்றார்.
-
இட்லி, வடை, சாம்பார்.. கர்நாடகாவில் நாளை நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக்












Click it and Unblock the Notifications