கர்நாடகாவில் திருப்பம்.. ஆட்டத்தை தொடங்கினார் சபாநாயகர்.. 3 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்
பெங்களூரு: பாஜகவுக்கு ஆதரவளித்த கர்நாடக சுயேச்சை எம்எல்ஏ சங்கர் மற்றும் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மகேஷ் கும்தஹள்ளி, ரமேஷ் ஜார்கிகோலி ஆகியோரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கேஆர் ரமேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். பிற அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா குறித்து பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி கடந்த 14 மாதங்களுக்கு முன்பு பதவியேற்றது. இந்நிலையில் லோக்சபா தேர்தலில் இந்த கூட்டணி படுதோல்வி அடைந்தது.
அதன் பின்னர் திடீர் திருப்பமாக பாஜக ஆட்சியமைப்பதற்கு ஏதுவாக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் 16 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

பாஜகவுக்கு ஆதரவு
இதனால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான கர்நாடக அரசு தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதில் கூடுதல் அதிர்ச்சியாக சுயேட்சை எம்எல்ஏக்கள் இருவரும் பாஜகவுக்கு ஆதரவாக திரும்பினார். இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்வது உறுதியானது.

ராஜினாமா ஏற்பு இல்லை
ஆனால் அவர்கள் இதுவரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை. இந்த சூழலில் கடந்த செவ்வாய்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்எல்ஏக்களில் 15 பேர் கலந்து கொள்ளவில்லை. ஒருவர் மட்டும் காங்கிரஸ்க்கு ஆதரவாக திரும்பினார்.

சபாநாயகர் ரமேஷ்குமார்
இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்கு ஆதரவளித்த கர்நாடக சுயேச்சை எம்எல்ஏ சங்கரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேபோல் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மகேஷ் கும்தஹள்ளி, ரமேஷ் ஜார்கிகோலி ஆகியோரை தகுதி நீக்கம் செய்தும் உத்தரவு பிறப்பித்தார். பிற அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா குறித்து பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.

சபாநாயகர் பரிசீலனை
இதனால் மீதமுள்ள 13 அதிருப்தி எம்எல்ஏக்களும் விரைவில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா என்ற சந்தேகத்தையும் இது ஏற்படுத்தியுள்ளது. பாஜக அரசு பதவியேற்கும் வரை ரமேஷ்குமார் தான் சபாநாயகராக தொடர்வார் என்பதால், அதற்குள் 15 பேரும் தகுதி நீக்கம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது என தெரிகிறது. இந்த 15 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட் பின்னர் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட்ட முடியாது. நடப்பு சட்டசபை காலம் முடிந்த பிறகுதான் அவர்களால் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏக்களாக முடியும். மேலவை உறுப்பினர்களாகவும் நடப்பு சட்டசபை காலத்தில் இவர்களை நியமிக்க முடியாது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications