Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகாவை உலுக்கிய திடீர் மாரடைப்பு மரணங்கள்.. இனி பிரேத பரிசோதனை கட்டாயம்- மாநில அரசு அதிரடி முடிவு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் ஹசான் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 20 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் இளைஞர்கள் என்பதால் இந்த விவகாரம் பூதாரகமாகியுள்ளது. இந்த நிலையில் ஹாசன் மாவட்டத்தில் நிழ்ந்த மாரடைப்பு மரணங்கள் குறித்து ஆராய மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு வருகிற 10 ஆம் தேதி அரசுக்கு அறிக்கை வழங்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகத்தில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களுக்கு பிரேத பரிசோதனை கட்டாயம் எனவும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் ஹசான் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 20 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அவர்களுக்கு எந்தவொரு இணை நோய்களும் இல்லை எனச் சொல்லப்படுகிறது.

karnataka-to-classify-sudden-deaths-as-notifiable-make-autopsy-mandatory

ஒரே மாதத்தில் அடுத்தடுத்து அடுத்தடுத்து ஏற்பட்ட இந்தச் சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இது தொடர்பாக 10 நாட்களில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டு இருந்தார்.

இந்த திடீர் மரணங்களுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற ரீதியில் சித்தராமையா கூறியிருந்தார். எனினும், இதனை திட்டவட்டமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மறுத்து இருந்தது. இந்த நிலையில் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தால் அவர்களது உடலை கட்டாயம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று மாநில அரசு அதிரடி நவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான அறிவுறுத்தலை கர்நடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் வெளியிட்டுள்ளார். தினேஷ் குண்டுராவ் பெங்களூரில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மாரடைப்பு ஏற்படுவது, கொரோனா பாதிப்பால் உடல்களில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய டாக்டர் ரவீந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையை தினேஷ் குண்டுராவ் பெற்றுக் கொண்டார். பின்னர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் உயர்ந்துள்ளது கவலை அளிக்கிற்து. கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ரவீந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையை என்னிடம் கொடுத்துள்ளது.. கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு பிறகு மாரடைப்புகள் சற்று உயர்ந்துள்ளது உறுதி செய்துள்ளது.

ஆனால் கொரோனா தடுப்பூசியால் இந்த பாதிப்பு ஏற்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு பிறகு சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் அதிகரித்துள்ளது. மாரடைப்புக்கு இதுவும் ஒரு காரணம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கை முறையும் மாரடைப்புக்கு காரணம் என்று குழு கூறியுள்ளது.

இந்த மாரடைப்பு மரணங்களை தடுக்க அரசு முக்கிமயான முடிவு எடுத்துள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். மருத்துவமனை தவிர்த்து பிற இடங்களில் நிகழும் மரணங்கள் விஷயத்தில் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இதனால் உயிரிழப்புக்கு சரியான காரணம் என்ன என்பது தெரியவரும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+