ஓமிக்ரான் பரவல்: கர்நாடகாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு... எவற்றுக்கெல்லாம் விதி விலக்கு?
பெங்களூரு: ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த கர்நாடகாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவில் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 700ஐ தொட்டிருக்கிறது.

நாட்டில் கர்நாடகாவில்தான் முதலாவது ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது கர்நாடகாவிலும் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் இன்று முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தார். இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.
Recommended Video
இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அத்தியாவசிய சேவைகள் சிலவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- - அவசர சிகிச்சைக்காக நோயாளிகள், அவர்களது உதவியாளர்கள் இரவில் செல்வதற்கு விதிவிலக்கு அளிக்கப்படும்
- - அத்தியாவசியம் எனில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இரவு நேரங்களில் இயங்க விதிவிலக்கு
- - தொலைபேசி, இணையசேவை, அத்தியாவசிய ஐடி துறையினர் உரிய அடையாள அட்டைகளுடன் வாகனங்களில் செல்ல விதிவிலக்கு
- - ஊரடங்கு நேரத்தில் மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் இயங்க விதிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- - சரக்கு வாகனங்கள், இ காமர்ஸ் வாகனங்களுக்கு விதிவிலக்கு
- - பேருந்துகள், ரயில்கள், மெட்ரோ ரயில்கள், விமான சேவைகள் ஊரடங்கு காலத்தில் இயங்க விதிவிலக்கு
- - விமான நிலையம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் செல்வதற்கும் அங்கிருந்து வீடுகளுக்கு திரும்புவதற்கும் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications