‛லெஸ்பியன்’ உறவு! கல்லூரி விடுதியில் நடந்த தகராறு.. மாணவியை பிளேடால் வெட்டிய தோழி..அதிர்ச்சி காரணம்
பெங்களூர்: கர்நாடகாவில் கல்லூரி விடுதியில் ‛‛லெஸ்பியன்'' உறவில் மாணவிகள் 2 பேர் இருந்தனர். இந்நிலையில் இவர்கள் 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மாணவியை அவரது தோழி பிளேடால் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் தாவணகெரெ டவுன் வித்யாநகர் அருகே தனியாருக்கு சொந்தமான ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
வெளிமாவட்ட மாணவிகள் கல்லூரியில் படிக்கும் நிலையில் அவர்களுக்கு தங்கும் விடுதி வசதி உள்ளது. இந்த விடுதி மாணவிகள் தங்கி தினமும் கல்லூரி சென்று வருகின்றனர்.

தோழிகள்
இந்த விடுதியில் சிக்கமகளூர் மாவட்டம் கடூரை சேர்ந்த லாவண்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தங்கி படித்து வருகிறார். இதேபோல் தாவணகெரேயை சேர்ந்த ரத்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறினர்.

பழிவாங்க திட்டம்
இருப்பினும் ரத்னா, லாவண்யாவின் பேச்சை கேட்கவில்லை. தொடர்ந்து இன்னொரு பெண்ணுடன் அவர் பேசியுள்ளார். இதனால் ரத்னா மீது லாவண்யா கடும் கோபமடைந்தார். மேலும் ரத்னாவை பழிவாங்க அவர் முடிவு செய்தார். அதன்படி விடுதியில் இருந்த ரத்னாவை, லாவண்யா தாக்கினார்.

பிளேடால் வெட்டி கொடூரம்
அதோடு ரத்னாவின் உடலில் பிளேடு கொண்டு வெட்டினார். கழுத்து, முகத்தில் பிளேடால் அறுத்த நிலையில் வலி தாங்க முடியாமல் ரத்னா கூச்சலிட்டார். இதையடுத்து அங்கிருந்த பிற மாணவிகள் ஓடிவந்தனர். பயந்துபோன லாவண்யா தனது கையையும் பிளேடால் வெட்டிக்கொண்டார். இதையடுத்து சக மாணவிகள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவி கைது
இதுபற்றி அறிந்ததும் வித்யாநகர் போலீசார் விசாரணை நடத்தினர். லெஸ்பியன் ஜோடிகளாக லாவண்யா, ரத்னா ஆகியோர் இருந்ததும், இதில் ரத்னா இன்னொருவருடன் நெருங்கி பேசி வந்ததால் ஆத்திரமடைந்த ரத்னா அவரை பழிவாங்க பிளேடால் வெட்டியதும் தெரியவந்தது. இதுபற்றி தாவணகெரே மாவட்ட எஸ்பி ரிஷ்யாந்த் கூறுகையில், ‛‛சம்பவம் தொடர்பாக வித்யாநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் பிளேடால் அறுத்த மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என்றார். அதன்படி சம்பவம் குறித்த புகாரின் பேரில் வித்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications