Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛லெஸ்பியன்’ உறவு! கல்லூரி விடுதியில் நடந்த தகராறு.. மாணவியை பிளேடால் வெட்டிய தோழி..அதிர்ச்சி காரணம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் கல்லூரி விடுதியில் ‛‛லெஸ்பியன்'' உறவில் மாணவிகள் 2 பேர் இருந்தனர். இந்நிலையில் இவர்கள் 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மாணவியை அவரது தோழி பிளேடால் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் தாவணகெரெ டவுன் வித்யாநகர் அருகே தனியாருக்கு சொந்தமான ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

வெளிமாவட்ட மாணவிகள் கல்லூரியில் படிக்கும் நிலையில் அவர்களுக்கு தங்கும் விடுதி வசதி உள்ளது. இந்த விடுதி மாணவிகள் தங்கி தினமும் கல்லூரி சென்று வருகின்றனர்.

தோழிகள்

தோழிகள்

இந்த விடுதியில் சிக்கமகளூர் மாவட்டம் கடூரை சேர்ந்த லாவண்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தங்கி படித்து வருகிறார். இதேபோல் தாவணகெரேயை சேர்ந்த ரத்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறினர்.

பழிவாங்க திட்டம்

பழிவாங்க திட்டம்

இருப்பினும் ரத்னா, லாவண்யாவின் பேச்சை கேட்கவில்லை. தொடர்ந்து இன்னொரு பெண்ணுடன் அவர் பேசியுள்ளார். இதனால் ரத்னா மீது லாவண்யா கடும் கோபமடைந்தார். மேலும் ரத்னாவை பழிவாங்க அவர் முடிவு செய்தார். அதன்படி விடுதியில் இருந்த ரத்னாவை, லாவண்யா தாக்கினார்.

பிளேடால் வெட்டி கொடூரம்

பிளேடால் வெட்டி கொடூரம்

அதோடு ரத்னாவின் உடலில் பிளேடு கொண்டு வெட்டினார். கழுத்து, முகத்தில் பிளேடால் அறுத்த நிலையில் வலி தாங்க முடியாமல் ரத்னா கூச்சலிட்டார். இதையடுத்து அங்கிருந்த பிற மாணவிகள் ஓடிவந்தனர். பயந்துபோன லாவண்யா தனது கையையும் பிளேடால் வெட்டிக்கொண்டார். இதையடுத்து சக மாணவிகள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவி கைது

மாணவி கைது

இதுபற்றி அறிந்ததும் வித்யாநகர் போலீசார் விசாரணை நடத்தினர். லெஸ்பியன் ஜோடிகளாக லாவண்யா, ரத்னா ஆகியோர் இருந்ததும், இதில் ரத்னா இன்னொருவருடன் நெருங்கி பேசி வந்ததால் ஆத்திரமடைந்த ரத்னா அவரை பழிவாங்க பிளேடால் வெட்டியதும் தெரியவந்தது. இதுபற்றி தாவணகெரே மாவட்ட எஸ்பி ரிஷ்யாந்த் கூறுகையில், ‛‛சம்பவம் தொடர்பாக வித்யாநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் பிளேடால் அறுத்த மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என்றார். அதன்படி சம்பவம் குறித்த புகாரின் பேரில் வித்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+