‛‛மசாஜ் பார்லரில் விபசாரம்’’.. தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட இளம்பெண்கள்.. அதிர்ந்த பெங்களூர்
பெங்களூர்: தாய்லாந்தை சேர்ந்த இளம்பெண்களை ஏமாற்றி இந்தியா அழைத்து வந்து மசாஜ் பார்லர் என்ற பெயரில் விபசாரத்தில் தள்ளிய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 7 தாய்லாந்து இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூர்.. பிரபல ஐடி நிறுவனங்கள் உள்ப பல்வேறு முன்னணி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கர்நாடகா மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர்.

குறிப்பாக வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வேலைக்காக பெங்களூர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தான் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தாய்லாந்தை சேர்ந்த 7 இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:
பெங்களூர் எலகங்கா நியூ டவுனில் ‛ரோரா லக்சரி தாய் ஸ்பா' என்ற பெயரில் மசாஜ் பார்லர் செயல்பட்டு வருகிறது. இங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடக்கிறது. வாடிக்கையாளர்கள் போல் வரும் நபர்கள் பணம் கொடுத்து உல்லாசம் அனுபவித்து செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அந்த மசாஜ் பார்லரை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் திடீரென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மசாஜ் பார்லரில் விபசாரம் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து விபசாரம் நடத்திய 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவர்களின் பெயர்கள் ஆஞ்சநேய கவுடா மற்றும் ஹரீஸ் என்பது தெரியவந்தது. மேலும் விபசாரத்தில் தள்ளப்பட்ட 7 இளம்பெண்களை போலீசார் மீட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது மீட்கப்பட்ட இளம்பெண்கள் அனைவரும் தாய்லாந்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தாய்லாந்தில் வேலை செய்த வந்த அவர்களை நல்ல சம்பளத்தில் பெங்களூரில் வேலை வாங்கி தருவதாக ஒரு கும்பல் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் சுற்றுலா விசா மற்றும் தொழில்முறை விசாவில் பெங்களூர் வந்துள்ளனர்.
அதன்பிறகு அவர்களை அந்த கும்பல் விபசாரத்தில் தள்ளியது தெரியவந்தது. மீட்கப்பட்ட 7 தாய்லாந்து இளம்பெண்களும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் தொடர்புடையவர்களை பிடிக்கும் முனைப்பில் போலீசார் செயல்பட்டு வருகின்றனர்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications