நாங்களும் தருவோம்ல.. கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு பெரியார் செங்கோல் வழங்கும் தமிழ்நாடு அமைப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு பெரியார் உருவம் பொறித்த சமூக நீதி செங்கோல் வழங்க தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்த சமூக நீதி பேரவை முடிவு செய்துள்ளது.

புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி டெல்லியில் அண்மையில் திறந்து வைத்தார். இந்த நாடாளுமன்றத்தின் லோக்சபா சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல் ஒன்றையும் நிறுவினார் பிரதமர் மோடி. இந்த செங்கோல் குறித்த சர்ச்சை இன்னமும் ஓயவில்லை.

Now Periyar Sengol to be gift to Karnataka CM Siddaramaiah

இந்திய விடுதலையின் போது தமிழ்நாட்டின் திருவாவடுதுறை ஆதீனத்தால் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் கொடுக்கப்பட்டு அதிகார மாற்றத்தின் குறியீடாக ஜவஹர்லால் நேருவிடம் கொடுக்கப்பட்ட செங்கோல் என்பது ஆளும் தரப்பின் கருத்து. ஆனால் இது அப்பட்டமான கட்டுக் கதை; திருவாவடுதுறை ஆதீனம் தங்களை தற்காத்துக் கொள்ள நேருவிடம் கொடுத்ததாக சொல்லிக் கொள்கிற; பத்திரிகைகளில் காசு கொடுத்து விளம்பரம் செய்ததுதான் செங்கோல் கதை என்கிறது எதிர்க்கட்சித் தரப்பு. இது தொடர்பான சர்ச்சை இன்னமும் ஓயவில்லை.

இதற்கு பதிலடியாக சமூக நீதி பேசுகிற கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு பெரியாரின் உருவம் பொறித்த சமூக நீதி செங்கோல் வழங்க மதுரையை சேர்ந்த சமூக நீதிப் பேரவை முடிவு செய்துள்ளது. இந்த செங்கோலை இந்த அமைப்பின் 30 பேர் கொண்ட குழு கர்நாடகா முதல்வர் சித்தராமையாவிடம் வழங்க உள்ளது.

இந்த செங்கோலும் தங்க முலாம் பூசப்பட்டதுதானாம். இந்த செங்கோலை வழங்கி சமூக நீதியை காப்பாற்ற வேண்டும் என மதுரை அமைப்பினர் சித்தராமையாவிடம் கோரிக்கை வைக்கின்றனராம்!

செங்கோல்! செங்கோல்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+