அய்யோ 2.5 கோடி போகுதே .. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தங்க நகைகள்.. கதறிய நகைக்கடை உரிமையாளர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சுமார் 2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதில் பெங்களூரு நகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது.

பெங்களூரு நகரின் சுரங்கப் பாதைகள், பிரதான சாலைகள் போன்றவற்றில் மழை நீர் தேங்கி நின்றது. கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

RS 2.5 crore worth of gold jewelery washed away in floods in Bengaluru, Karnataka

இந்நிலையில் பெங்களூரு மல்லேஸ்வரத்தில் தாழ்வான இடத்தில் நகைக்கடை ஒன்று இருந்தது. இந்த நகைக்கடைக்குள் வெள்ள நீர் புகுந்தது.

இதில் கடையின் தரைதளத்தில் இருந்த சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. வெள்ளத்தின் வேகத்தில் நகைகள் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. இதை பார்த்து கடையின் உரிமையாளர்கள், ஊழியர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

RS 2.5 crore worth of gold jewelery washed away in floods in Bengaluru, Karnataka

கடையில் இருந்து சுமார் 80 சதவீதம் நகைகள் அடித்துச் செல்லப்பட்டதாக நகைக்கடை உரிமையாளர் கூறினார். எஞ்சிய நகைகள் நனைந்த நிலையில் மீட்கப்பட்டதாக கூறினார். மழையில் அடித்துச் செல்லப்பட்ட நகைகளை மீட்க மாநகராட்சியின் உதவியை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

RS 2.5 crore worth of gold jewelery washed away in floods in Bengaluru, Karnataka
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+