அதெல்லாம் நீங்க சொல்லக் கூடாது.. ஏன் சொல்றீங்க.. ரஷ்ய கொரோனா தடுப்பூசி பற்றி கிரண் மஜும்தார் பொளேர்
பெங்களூர்: கொரோனா வைரசுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளதை ஏற்க முடியாது என்று பயோகான் நிறுவன தலைவர் கிரண் மஜும்தார் ஷா.
Recommended Video
கொரோனா வைரஸுக்கு எதிரான முதல் தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக கடந்த 11ஆம் தேதி ரஷ்யா அறிவித்தது.
மாஸ்கோவை சேர்ந்த கமலேயா தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் தேசிய ஆராய்ச்சி மையம் இந்த தடுப்பூசியை தயாரித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா அறிவிப்பு
இதன் மூலம் உலகத்திலேயே கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசியை அறிமுகப்படுத்திய முதல் நாடு தங்களுடையது என்று ரஷ்ய அதிபர் புடின் அறிவித்தார். ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளோ, 2 மனித டிரையல் மட்டுமே முடிவடைந்த நிலையில், இந்த தடுப்பூசியை ஏற்க முடியாது என்று கூறி வருகின்றன.

உலக சுகாதார அமைப்பு
உலக சுகாதார ஆய்வு அமைப்பு, ரஷ்ய தடுப்பூசி முழுவதுமாக பரிசோதனைக்கு உட்பட வில்லை என்று கூறியுள்ளது. இந்த நிலையில்தான் இந்தியாவின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜும்தார் ஷா இதுபற்றி கருத்து கூறியுள்ளார்.

முதல் தடுப்பூசி இல்லை
ரஷ்யா தயாரித்து உள்ளதாக கூறப்படும் இந்த மருந்து தொடர்பான எந்த ஒரு டேட்டாவும் உலகநாடுகளுக்கு தரப்படவில்லை. முதல் மற்றும் இரண்டாவது கட்ட சோதனைகள் பற்றிய விபரமும் தெரிவிக்கப்படவில்லை. மூன்றாவது கட்ட பரிசோதனைகள் நடத்தப்படாமல் ஒரு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவது நல்லது என்று ரஷ்ய நினைத்தால் அது அவர்களுடைய கருத்து. இதற்காக உலகத்தின் முதல் தடுப்பூசி தங்களுடையது என்று ரஷ்யா கூறிவிடமுடியாது. இந்த தடுப்பூசியை விடவும் இன்னும் பல தடுப்பூசிகள் அட்வான்ஸ் நிலையில் ஆய்வுப் பணியில் உள்ளன. இவ்வாறு கிரண் மஜூம்தார் ஷா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

டிரையல்கள்
ஸ்பூட்னிக்-5 என்ற பெயரில் ரஷ்யா அறிமுகம் செய்துள்ள தடுப்பூசி உடலில் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதற்கான, மனித அடினோ வைரஸை அடிப்படையாகக் கொண்டது. இது சீனாவின் கேன்சினோ பயோலாஜிக்ஸ் உருவாக்கும் தடுப்பூசியை போன்றது என்று கூறப்படுகிறது. கொரோனா தொற்றுநோயைத் தடுக்கும் முயற்சியாக, 100க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உலகம் முழுவதும் உருவாக்கப்படுகின்றன. உலக சுகாதார ஆய்வு அமைப்பின் தரவுப்படி குறைந்தது நான்கு தடுப்பூசி நிறுவனங்கள், 3வது கட்ட மனித சோதனைகளில் உள்ளன.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications