கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் பதவியை ராஜினமா செய்த பின்னர் சித்தராமையா வெளியிட்ட உருக்கமான பதிவில், ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான், ஒரு நாள் இந்த மாநிலத்தின் ஆட்சியாளராக, அமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக மற்றும் இரண்டு முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்பேன் என்று என் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. இவ்வளவு பெரிய ஆடம்பரமான ஒரு கனவு நிஜமாக மாறியிருக்கிறது என்றால், அதற்கு பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
கர்நாடக முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் மேலிட உத்தரவை ஏற்று டி.கே. சிவக்குமார் உடன் பெங்களூருவில் உள்ள மக்கள் மாளிகைக்கு சித்தராமையா இன்று சென்றார். எனினும், கவர்னர் இல்லாத சூழலில், அவருடைய செயலரிடம் ராஜினாமா கடிதம் வழங்கினார். இதனை தொடர்ந்து, டி.கே. சிவக்குமார் நாளை முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மாநில முதல்-அமைச்சராக சித்தராமையா பதவி வகித்து இருக்கிறார். கர்நாடகாவின் நீண்ட கால முதல்-அமைச்சர் என்ற பெருமையை பெற்றவர் ஆவார். இதனிடையே பதவியை ராஜினாமா செய்தபின்னர் சித்தராமையா உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் சித்தராமையா கூறுகையில், "இன்று, நான் ராஜ் பவனுக்குச் சென்று, மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இல்லாததால், அவருடைய சிறப்பு அதிகாரிகளிடம் எனது முதலமைச்சர் பதவிக்கான ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தேன்.
ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான், ஒரு நாள் இந்த மாநிலத்தின் ஆட்சியாளராக, அமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக மற்றும் இரண்டு முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்பேன் என்று என் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. இவ்வளவு பெரிய ஆடம்பரமான ஒரு கனவு நிஜமாக மாறியிருக்கிறது என்றால், அதற்கு பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம் தான் காரணம்.
புத்தர், பசவண்ணர், பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரே எனது வழிகாட்டிகள் (Ideals). எனது முப்பத்தெட்டு ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், இந்த மாநிலத்தின் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மற்றும் ஏழை எளிய மக்களுக்காக நேர்மையாக உழைத்ததில் எனக்கு ஒரு முழுமையான திருப்தி கிடைத்துள்ளது.
என்னை சட்டமன்றக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுத்து, இதுநாள் வரை முதலமைச்சராக மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பை வழங்கிய கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும்; என்னோடு தோளோடு தோள் நின்று பணியாற்றிய எனது அமைச்சரவை சக ஊழியர்களுக்கும்; எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கும்; எனது அரசியல் வாழ்க்கையை அன்பால் நிரப்பி, என்னைப் பாராட்டி, இவ்வளவு தூரம் கைகோர்த்து வழிநடத்திய அன்பான கன்னட மக்களுக்கும் நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.
அரசியலமைப்புச் சட்டமே எனது மதம், மக்களே என் பக்கமிருக்கும் தெய்வங்கள். எனது இந்த ராஜினாமா முதலமைச்சர் பதவிக்கு மட்டும்தான், தீவிர அரசியலுக்கு அல்ல. எனது கடைசி மூச்சு இருக்கும் வரை, சமூக நீதிக்காகவும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும் எனது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்" இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார்.
-
இட்லி, வடை, சாம்பார்.. கர்நாடகாவில் நாளை நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் -
கர்நாடகா புது முதல்வர் யார்? டிகே சிவக்குமார் பெயரை சொல்ல மறுத்த சித்தராமையா! அழிக்கப்பட்ட மெசேஜ் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக்














Click it and Unblock the Notifications