கடனை விட சொத்துகள் அதிகம்.. உரியவர்களுக்கு திருப்பி கொடுங்கள்.. கடிதத்தில் சித்தார்த்தா உருக்கம்
Recommended Video
பெங்களூர்: கடன் கொடுத்தவர்களுக்கு சொத்துகளை திருப்பி கொடுத்துவிடுங்கள் என தனது இறுதி கடிதத்தில் சித்தார்த்தா குறிப்பிட்டுள்ளார்.
காபி டே நிறுவனர் சித்தார்த்தா, நேற்று இரவு மங்களூர் அருகே உள்ள நேத்ராவதி ஆற்றுப் பாலத்தில் நடக்க சென்றவர் திரும்பி வரவேயில்லை. கார் டிரைவர் அவரை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து தக்ஷின கன்னட போலீஸார், சித்தார்த்தாவை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் சித்தார்த்தா காணாமல் போனதற்கு இரு நாட்களுக்கு முன்னர் தனது நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

வர்த்தகம்
அந்த கடிதத்தில் கடும் முயற்சிகளை மேற்கொண்டும் எனது தொழிலை லாபகரமானதாக்க முடியவில்லை. என் மீது நம்பிக்கை வைத்திருந்தவர்களுக்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 6 மாதத்திற்கு முன்பு நான் ஒரு வர்த்தகத்தை மேற்கொண்டிருந்தேன். இதற்காக எனது நண்பர் ஒருவரிடமிருந்து பெரும் பணத்தை கடனாக பெற்றேன்.

போராட்டம்
ஆனால் நான் விற்ற பங்குகளைத் திரும்ப வாங்கிக் கொள்ளுமாறு எனது பங்குகளை வாங்கிய ஒருவர் என்னை மிகவும் நெருக்குகிறார். நீண்ட காலம் நான் போராடி விட்டேன்.. இனிமேலும் என்னால் போராட முடியவில்லை. எனவே எனது போராட்டத்தை நிறுத்திக் கொள்ள தீர்மானித்து விட்டேன்.

சொத்துகள் பட்டியல்
எனக்கு யாரையும் ஏமாற்றும் எண்ணம் இல்லை. ஒரு தொழில்முனைவோராக நான் தோற்றுவிட்டேன். இதை நீங்கள் என்றாவது ஒரு நாள் புரிந்து கொள்வீர்கள். என்னை மன்னித்துவிடுங்கள். இந்த கடிதத்துடன் எனக்கு சொந்தமான சொத்துகளின் பட்டியலை இத்துடன் இணைத்துள்ளேன்.

திருப்பி செலுத்துங்கள்
மேலும் அந்த சொத்துகளின் தோராய மதிப்பையும் குறிப்பிட்டுள்ளேன். கடன் தொகையை விட அதிக எண்ணிக்கையில் சொத்துகள் உள்ளன. எனவே யாருக்கெல்லாம் கடன் கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு திருப்பி செலுத்திவிடுங்கள் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications