ராகுல் காந்தியின் பாதயாத்திரை...கர்நாடகாவில் நாளை இணையும் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி!
பெங்களூர்: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாதயாத்திரையில் அவரது தாயாரும் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவருமான சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இணைய உள்ளனர்.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை இலக்கு வைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் செப்டம்பர் 7-ந் தேதி இந்த பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.
தமிழகம், கேரளாவில் தமது பாதயாத்திரையை நிறைவு செய்த ராகுல் காந்தி தற்போது கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கர்நாடகாவில் கொட்டும் மழையில் ராகுல் காந்தி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பெருமளவு பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராகுல் காந்தியின் பயணத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி இணைய உள்ளனர். இதற்காக இருவரும் நாளை கர்நாடகா வருகை தர உள்ளனர். நவராத்திரி பூஜையை முன்னிட்டு ராகுல் நடைபயணம் 2 நாட்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த 2 நாட்கள் ராகுல் காந்தியுடன் சோனியா, பிரியங்கா தங்க உள்ளனர்.
பின்னர் அக்டோபர் 6-ந் தேதி ராகுல் காந்தியுடன் இணைந்து சோனியாவும் பிரியங்காவும் சிறிது தொலைவு பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கின்றனர். ராகுல் காந்தி மொத்தம் 3,600 கி.மீ.தொலைவு பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். தற்போது வரை சுமார் 600 கி.மீ. தொலைவை கடந்துள்ளார்.
முன்னதாக நேற்று காந்தி ஜெயந்தியையொட்டி நஞ்சன்கூடு தாலுகா பதனவாலு கிராமத்தில் காதி கிரமோத்யோக் மையத்தில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். அப்போது, அண்ணல் மகாத்மா காந்தியடிகள் உயிரை கொடுத்து காப்பாற்றிய அரசியல் சாசனத்துக்கு இன்று நாட்டில் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பிரிவினை அரசியலுக்கு எதிரான மக்களின் குரலே இந்த பாதயாத்திரை என்றார் ராகுல் காந்தி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications