ஆன்லைனிலேயே தமிழ் கற்கலாம்.. வெளிமாநிலம் - வெளிநாட்டில் உள்ளோருக்கு சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க
பெங்களூர்: பெங்களூர் தமிழ் அறக்கட்டளை சார்பில் ஆன்லைனில் தமிழ் கற்றல் வகுப்பு தொடங்கப்பட உள்ளது. உலகில் எங்கிருந்தாலும் இந்த இணைய வகுப்பில் கலந்து 4 வாரத்தில் தமிழ் கற்றுக்கொள்ளலாம். இதற்கான அட்மிஷன் தொடங்கி நடந்து வருகிறது.
தமிழ்நாட்டை பூர்வீமாக கொண்ட பலரும் வேலை நிமித்தமாக வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் தற்போது வசித்து வருகின்றனர். இதனால் அவர்களின் குழந்தைகள் தமிழ் கற்க முடியாத நிலை இருக்கலாம்.

இதனை போக்கவும், பழம்பெருமை நிறைந்த தமிழ் மொழியை அனைவரும் கற்கும் வகையில் வாய்ப்பு உருவாக்கி தருகிறது தமிழ் அறக்கட்டளை - பெங்களூர்.
இந்த தமிழ் அறக்கட்டளை பெங்களூர் சார்பில் உலகெங்கிலும் உள்ள தொலைதூரத் தமிழர்களுக்காக தமிழ் கற்றல் வகுப்புகள் ஆன்லைனில் தொடங்கி நடைபெற உள்ளது. இதனால் வீட்டில் இருந்த இடத்திலேயே இருந்து ஆன்லைனிலேயே தமிழ் கற்று கொள்ளலாம்.
தற்போது ஏப்ரல் மாதத்துக்கான அட்மிஷன் நடந்து வருகிறது. விருப்பம் உள்ளவர்கள் அட்மிஷனில் பங்கேற்று ஆன்லைன் வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம். அட்மிஷனுக்கான கடைசி தேதி 31.03.2026 ஆகும். இந்த ஆன்லைன் வகுப்புகள் 4 வாரங்கள் இருக்கும். வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வகுப்புகள் நடக்கும். சனி , ஞாயிறு விடுமுறை தினமாகும். 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் (குழந்தைகள் -இளம்வயதினர்) பங்கேற்றகலாம். தமிழ் மொழியிலேயே வகுப்புகள் நடத்தப்படும்.
மொத்தம் 4 படிநிலைகளில் வகுப்புகள் இருக்கும். படிநிலை 1 என்பது அடிப்படை தமிழ் சார்ந்து இருக்கும். இதற்கு நன்கொடையாக ரூ.500 வழங்க வேண்டும். படிநிலை 2-ல் இடைநிலை தமிழ் வகுப்பாகும். நன்கொடையாக ரூ.1000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த 2 வகுப்புகளும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடக்கும்.
அதன்பிறகு படிநிலை 3 என்பது உயர்நிலை தமிழ் வகுப்பாகும். இதற்கு நன்கொடையாக ரூ.1,500 நிர்ணயம் செய்யப்ப்டடுள்ளது. இந்த வகுப்பு மாலை 7 மணி முதல் 8 மணி வரை நடக்கும். படிநிலை 4ல் அடிப்படை தமிழ் இலக்கணமாகும். இதற்கான நன்கொடை ரூ.1,000 ஆகும். இந்த வகுப்பு மாலை 7.10 மணி முதல் 8 மணி வரை இருக்கும்.
* ஏதேனும் சந்தேகம் இருப்பின் வாட்ஸ்அப்பில் 78991 92588 என்ற எண்ணை தொடர்பு கொள்ளாம். இ-மெயில் என்றால் [email protected] என்பதை தொடர்பு கொள்ளலாம்.
* அட்மிஷனுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யலாம் https://forms.gle/P796YCZBHdzJjBf7A
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications