அடப்பாவி.. தலைக்கேறிய மப்பு.. குறுக்கே வந்து ஸ்னேக் பாபு.. கடுப்பாகி பிடித்து.. ஏன் குமாரு இந்த வெறி
பாம்பை ஒருவர் கடித்து துப்பிய வீடியோ வைரலாகி வருகிறது
பெங்களூரு: பாம்பு கடித்து மனிதர்கள் இறப்பது அந்த காலம்.. இப்போ அப்படி இல்லை.. மனிதர்களை கண்டு பாம்பு நடுங்கி ஓடி ஒளிகிறது.. ரோட்டில் பாம்பு ஒன்று குறுக்கே வந்துவிட்டது.. அதனால் போதை தலைக்கேறிய குமார், உயிருடன் இருந்த அந்த பாம்பை கையில் பிடித்து கொண்டே துண்டு துண்டாக கடித்து துப்பி உள்ளார்.. கடிக்கும்போது, "இனிமேல் என் வழியில் குறுக்கே வருவியா" என்று பாம்பிடம் பேசிக் கொண்டே அதை கொன்றுள்ளார். அந்த பகுதி மக்கள் இந்த சம்பவத்தை நடுங்கியபடியே வீடியோ எடுத்துள்ளனர்!!
Recommended Video
இவ்வளவு நாள் நிம்மதியாக இருந்த நிலையில், பல மாநிலங்களில் மதுக்கடைகள் அடுக்கடுக்காக திறந்து விடப்பட்டுள்ளன.. இதனால் குடிமகன்கள் அட்டகாசம் 2 நாளாக பெருகி கொண்டு வருகிறது.
மதுவிற்பனையில் கர்நாடகம்தான் லீடிங்கில் உள்ளதாக சொல்லப்படுகிறது. சும்மாவே குடிமகன்களின் அலப்பறைகள் தாங்காத நிலையில், கொரோனா காலத்தில் மேலும் ரகளை அதிகமாகி கொண்டே வருகிறது.

பைக்
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் குமார் என்ற இளைஞர். இவர் மதுக்கடை திறந்த குஷியில் ஓவராக குடித்துவிட்டார்.. பிறகு அங்கிருந்து பைக் எடுத்து கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்... அப்போது ரோட்டில் ஒரு பாம்பு குறுக்கே சென்றது.. ஆனால் அந்த பாம்பு மீது பைக் சக்கரம் ஏறிவிட்டதால், அடி பலமாக பட்டது.

நடுரோடு
அடிபட்டு உயிருக்கு துடித்த அந்த பாம்பை பார்த்ததும் குமார் வண்டியை நிறுத்திவிட்டார்.. பாம்பை கையில் எடுத்து நடுரோட்டில் பைக்கில் உட்கார்ந்துகொண்டு கடித்து குதற ஆரம்பித்தார். பிறகு கடித்து கொண்டே அந்த பாம்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.. "நான் வரும்போது வழியில நீ எப்படி வரலாம்? இனிமேல் என் வழியில குறுக்கே வருவியா" என்று கேட்டுக் கொண்டே பாம்பை துண்டு துண்டாக கடித்து துப்பினார்.

கொன்னுட்டேனே
"நீ என்னை கடிக்கலாம்னுதானே வந்தே, ஆனால் அதுக்கு முன்னாடியே நான் உன்னை கொன்னுட்டேனே" என்று உளறி உள்ளார்.. பாம்பை உயிருடன் பிடித்து கடித்து துப்பியதை பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியாகி நின்றனர்.. சிலர் இதை செல்போனில் வீடியோவாக படம் பிடித்தனர்.. போதையின் உச்சத்துக்கு சென்ற இளைஞரின் இந்த வீடியோ பார்த்த பலரும் விக்கித்து உறைந்துள்ளனர்.

வைரல் வீடியோ
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.. இப்படித்தான் குஜராத்திலும் 70 வயது முதியவர் தன்னை கடித்த பாம்பை கடித்து துப்பினார்.. இப்போது கர்நாடகாவில் கடித்து துப்பி உள்ளார்.. நாளைக்கு நம்ம ஊரிலும் குடிமகன்கள் இப்படி இறங்கி விடுவார்களோ என்று அச்சமாக உள்ளது.. இன்னும் ஊரடங்கு முடிவதற்குள் நாம் என்னென்னவெற்றை எல்லாம் பார்க்க வேண்டி உள்ளதோ!!
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications