தலைவர் பதவியை பறிக்காதீங்க-11 எம்எல்ஏக்கள், 2எம்பிக்களுடன் பெங்களூரில் கார்கேவிடம் கேஎஸ் அழகிரி அடம்
பெங்களூர்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து தம்மை நீக்கக் கூடாது என அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை பெங்களூரில் தமது ஆதரவாளர்களுடன் சந்தித்து வலியுறுத்தி இருக்கிறார் கே.எஸ்.அழகிரி.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக 2018-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார் கே.எஸ்.அழகிரி. கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து நீடித்து வருகிறார் கேஎஸ் அழகிரி.

யார் புதிய தலைவர்?: இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து கே.எஸ். அழகிரி நீக்கப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக ஜோதிமணி எம்பி, கார்த்தி சிதம்பரம் எம்பி, தமிழ்நாடு காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் செல்வபெருந்தகை என பலரது பெயர்கள் அடிபட்டன. மேலும் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டால் தமிழ்நாடு சட்டசபை குழு தலைவராக மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நியமிக்கப்படலாம் எனவும் ஊடக செய்திகள் தெரிவித்திருந்தன.

பெங்களூர் முற்றுகை: இந்நிலையில் கே.எஸ்.அழகிரி, தமது ஆதரவு 11 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பிக்கள் மற்றும் 30 மாவட்ட தலைவர்களுடன் இன்று பெங்களூர் சென்றார். அங்கு காங்கிரஸ் காரிய கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை ஆதரவாளர்களுடன் கே.எஸ்.அழகிரி இன்று மாலை சந்தித்தார்.
பெங்களூருவில் சந்திப்பு: மல்லிகார்ஜூன கார்கேவுடனான சந்திப்பின் போது, தாமே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியதாக பெங்களூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமது பதவி காலத்தில் காங்கிரஸில் கோஷ்டிபூசலை வெகுவாக குறைத்துவிட்டதாகவும் ஆளும் திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகளுடன் இணக்கமான போக்கை பிரச்சனையில்லாமல் கையாண்டு வருவதாகவும் கே.எஸ். அழகிரி, கார்கேவிடம் விவரித்ததாகவும் கூறப்படுகிறது. அத்துடன் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமது பதவியை பறித்தால் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைவார்கள்; இதனால்தான் தம்முடன் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களும் பெங்களூர் வந்துள்ளனர் எனவும் கே.எஸ்.அழகிரி சுட்டிக்காட்டியதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
#WATCH | Tamil Nadu Congress leaders meet party president Mallikarjun Kharge in Bengaluru pic.twitter.com/hgnksjUCe9
— ANI (@ANI) August 18, 2023
அழகிரிக்கு எதிர்ப்பு: அதேநேரத்தில் 5 ஆண்டுகள் தலைவராக நீடித்துவிட்ட பிறகு, கட்சி மேலிடம் புதிய தலைவரை நியமிப்பது ஒன்றும் பிரச்சனைக்குரியது அல்ல. கே.எஸ்.அழகிரிதான் தமக்கும் செல்வாக்கு இருக்கிறது என பிரச்சனையை உருவாக்குவதற்காகவே பெங்களூர் சென்றுள்ளார் என்கின்றனர் அவருக்கு எதிரான கோஷ்டிகளின் தலைவர்கள். இதனால் தமிழ்நாடு காங்கிரஸ் வட்டாரங்களில் அடுத்தது என்னவாக இருக்கும்? என்கிற எதிர்பார்ப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications