பெங்களூரில் தொழில் அதிபர் காதலியுடன் கல்யாணம் செய்யாமலேயே வாழ்க்கை.. போலீசுக்கு தெரியவந்த ட்விஸ்ட்
பெங்களூர்: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மாயாங்க் ரஜனி என்பவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா பகுதிக்கு உள்பட்ட கரலூரு-கண்ணூரு மெயின் ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். மாயாங்க் கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூருவில் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்திருக்கிறார். திருமணம் செய்யாமல் காதலியுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். அவருக்கு என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது இன்றைக்கு பெங்களூர், சென்னை, ஹைதராபாத், மும்பை, புனே, கொச்சி, டெல்லி உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த கலாச்சாரம் பின்னாளில் இருவருக்குமே சிக்கலை ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் அந்த உறவு போரடித்து விடும் போது, இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிவிட்டு பிரிந்துவிடுகிறார்கள்.. சில நேரங்களில் அது சிக்கலான சூழலை ஏற்படுத்துகிறது. உறவை பிரிவதை தாங்க முடியாமல் சிலர் தவறான முடிவெடுக்கிறார்கள். பெங்களூரில் நடந்தது வேறு விஷயம்.. என்னவென்று பார்ப்போம்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 32 வயதாகும் மாயாங்க் ரஜனி என்பவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கரலூரு-கண்ணூரு மெயின் ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்திருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூரில் ஒரு நிறுவனத்தை மாயாங்க் நடத்தி வந்தார்.
இதற்கிடையில், மாயாங்க்குக்கு, மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அவருக்கு, தன்னுடைய நிறுவனத்தில் மாயாங்க் வேலையும் கொடுத்தார். அதன்பிறகு, தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பிலேயே இளம்பெண்ணையும் மாயாங்க் தங்க வைத்துள்ளார்.
அதன்பின்னர் மாயாங்க், இளம்பெண் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில் இருந்து மாயாங்க் கீழே குதித்தார். இதில், தலையில் பலத்தகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
இதுபற்றி அறிந்ததும் பரப்பன அக்ரஹாரா போலீசார் விரைந்து சென்று மாயாங்க் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அவருடன் வசித்த இளம்பெண்ணிடமும் விசாரித்தனர். இதில் மாயாங்க் நடத்தி வந்த நிறுவனம் நஷ்டத்தில் செயல்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அவர் உயிரைவிட்டதை போலீசார் உறுதி செய்தனர். இதுகுறித்து பரப்பன அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications