இனி ஐடி ஊழியர்களுக்கு தினசரி 14 மணி நேர வேலை? கர்நாடக ஐடி துறை அமைச்சர் சொல்வது என்ன! பரபர தகவல்
பெங்களூர்: கர்நாடகாவில் ஐடி ஊழியர்களின் வேலை நேரத்தை 14 மணி நேரமாக அதிகரிக்க அனுமதிக்கும் சட்டத் திருத்தம் தொடர்பான ஆலோசனை நடந்து வருவதாகத் தகவல் வெளியானது. இதற்கு ஏற்கனவே அங்குள்ள ஐடி ஊழியர்கள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இதற்கிடையே இது தொடர்பாகக் கர்நாடக ஐடி துறை அமைச்சர் பிரியங்க் கார்கே சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக தலைநகர் பெங்களூரைத் தான் ஐடி தலைநகர் என்றே குறிப்பிடுகிறார்கள். அந்தளவுக்கு ஐடி மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெங்களூரில் அதிகமாக இருக்கிறது.

இதற்கிடையே அங்கே ஐடி ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக அதிகரிப்பது தொடர்பான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியானது.
அமைச்சர் பிரியங்க் கார்கே: இதற்கிடையே இது தொடர்பாக அம்மாநில ஐடி துறை அமைச்சர் பிரியங்க் கார்கே சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது பணி நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 14 மணி நேரமாக நீட்டிப்பது தொடர்பாக ஐடி நிறுவனங்களின் முன்மொழிவு குறித்து தனக்குத் தெரியாது என்று பிரியங்க் கார்கே தெரிவித்தார். இந்த வரைவு மசோதாவைத் தொழிலாளர் துறை அமைச்சகம் கொண்டு வந்ததாகவும் இதற்கு ஒப்புதல் தரும் முன்பு தீவிர ஆலோசனை நடத்தப்படும் என்றும் அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
என்ன சொன்னார்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இந்த விவகாரத்தில் ஐடி நிறுவனங்கள் என்ன முன்மொழிவைக் கொடுத்தது என்று எனக்குத் தெரியாது.. ஆனால் தொழிலாளர் துறை இந்த விவகாரத்தில் ஒரு மசோதாவை கொண்டு வந்துள்ளது. அது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த மசோதா பற்றி தவறான கருத்து உள்ளது. நாங்கள் இந்த மசோதா தொடர்பாக விவாதம் நடத்துவோம். அதன் பிறகு இது குறித்து உரிய விளக்கத்தைத் தர உள்ளோம்" என்றார்.
பின்னணி என்ன: முன்னதாக ஐடி நிறுவனங்கள் வேலை நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 14 மணி நேரமாக அதிகரிக்க அனுமதிக்கும் சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாகக் கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியானது. அதற்குக் கர்நாடக மாநில ஐடி/ஐடிஇஎஸ் ஊழியர் சங்கம் மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. 14 மணி நேர வேலை என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல் என்றும் விமர்சித்திருந்தன.
மேலும், ஐடி ஊழியர்கள் சங்கம் மேலும் கூறுகையில், "இது அமலுக்கு வந்தால் மூன்று ஷிப்ட் முறைக்குப் பதிலாக இரண்டு ஷிப்ட் முறை அமலுக்கு வரும். இதனால் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் இருக்கிறது. அதிக நேரம் வேலை செய்வது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை பல்வேறு ஆய்வுகள் காட்டுகிறது. ஏற்கனவே ஐடி துறையில் 45% ஊழியர்கள் மனச்சோர்வும் 55% பேர் உடல்நிலை பாதிப்புகளும் உள்ளன.
வேலை நேரத்தை அதிகரிப்பது நிலைமையை மோசமாக்கும். எனவே, இந்த விவகாரத்தைக் கர்நாடக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாக இருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுபோல கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த மசோதாவைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அம்மாநில அரசே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications