"கலர்" மாறும் தென்னகம்?.. பள்ளிகளில் "பகவத்கீதை".. கமிட்டி ரெடியாகிறது.. கர்நாடக அமைச்சர் அதிரடி
பள்ளிகளில் பகவத்கீதையை சேர்க்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது
பெங்களூரு: "பள்ளி பாடத்திட்டங்களில் பகவத்கீதையை சேர்ப்பது தொடர்பாக ஆய்வு நடத்த கமிட்டி அமைக்கப்படும், அதன்பின் முதல்வருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்" என்று கர்நாடக தொடக்க, உயர்நிலைப்பள்ளி கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்தார்.
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில், பள்ளிப் பாடத்திட்டத்தில், பகவத் கீதை சேர்க்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியது.
வடமாநிலங்களில் இத்தகைய அறிவிப்பு வெளியாவது இயல்பு என்றாலும், பிறகு, பாஜக ஆட்சி நடைபெறும் இன்னொரு மாநிலமான கர்நாடகாவிலும் இதே பேச்சு கிளம்பியது பல தரப்பையும் அதிர வைத்தது.

கர்நாடகா
கர்நாடகாவிலும் குஜராத் போலவே, இத்தகைய பாடத்திட்டம் சேர்க்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையே அறிவிப்பு வெளியிட்டார்.. பொம்மை இவ்வாறு சொன்ன மறுநாளே, பள்ளிப்பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க, கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் நாகேஷ் வெளிப்படையாகவே செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்..

குழந்தைகள்
அப்போது அவர் சொல்லும்போது, "பகவத் கீதையை அறிமுகப்படுத்துவது தொடர்பாக முதல்வருடன் விவாதித்த பிறகே, அறநெறி பாடத்தை அறிமுகப்படுத்துவது குறித்து முடிவெடுப்போம், குழந்தைகளிடையே நமது கலாசார விஷயங்கள் மெல்ல மறைந்து வருகிறது... அதனால்தான், அறநெறி பாடத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமாயணம், மகாபாரதம் தொடர்பான உள்ளடக்கம் கற்பிக்கப்படும், அறிநெறி வகுப்பு, வாரம் ஒருமுறை இருந்தது...

வல்லுநர்கள்
வரும் நாட்களில் இதை அறிமுகப்படுத்துவது குறித்து முதலமைச்சரின் ஆலோசனையைப் பெறுவோம். இதை கற்பிக்கலாம் என்று முடிவு செய்தால் நிச்சயம் கல்வி வல்லுனர்களுடன் வகுப்பின் கால அவகாசம் உட்பட விஷயங்கள் விவாதிப்போம்.. மகாத்மா காந்தி உட்பட பலர் பகவத் கீதை, ராமாயணம் மற்றும் மகாபாரதம் உத்வேகம் அளிக்கின்றனர்.. காந்தியின் தாய், ராமாயணம், மகாபாரதம் பெருமையை போதித்துள்ளார்... அதனால், இந்து ஹிந்து சமய நூல்களிலுள்ள ஒழுக்கங்கள் குறித்து மாணவர்கள் போதிப்பதால் இந்திய கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள முடியும்.. இரவில் தூங்குவதற்கு முன்பு பகவத் கீதை படிப்பதால், தனக்கு மிகப்பெரிய பலம் கிடைக்கிறது என்று முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணாஎன்கிட்டே சொன்னார்" என்று தெரிவித்திருந்தார்.

பாடத்திட்டம்
அமைச்சரின் இந்த பேச்சுக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார்.. ஏற்கனவே பாடத்திட்டத்தில் இருக்கும் விஷயத்தை மறுபடியும் பெரிதுபடுத்தியும், புதிதாகவும் காட்ட தேவையில்லை... மதங்கள் தொடர்பான விஷயங்களை தெரிந்து கொள்வதில் தப்பில்லை, ஆனால், பாஜகவினர் என்ன விஷயத்தை பாட புத்தகத்தில் கொண்டு வருகின்றனர் என்பதை பார்க்க வேண்டும்... பாஜக புதுமையான யோசனையை ஒன்றும் அறிமுகம் செய்யவில்லை" என்று கூறியிருந்தார்.

பாஜக அரசு
புதிதாக அறிமுகப்படுத்தப்படும் தேசிய கல்வி கொள்கையின்கீழ் பள்ளிகளில் பகவத்கீதையை பாடமாக கொண்டு வரும் திட்டத்திற்கு, கல்வியாளர்கள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது... கல்வித்துறையை காவிமயமாக்கும் முயற்சிகள் நடப்பதாக சர்ச்சைகள் வெடித்தன.. ஆனால், கர்நாடக முதல்வர் அறிவிப்பு வெளியிட்ட மறுநாளே அமைச்சர் நாகேஷ், "பள்ளிகளில் பகவத்கீதை மற்றும் ராமாயணத்தை பாடமாக கொண்டு வருவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை" என்று சட்டசபையில் மறுத்திருந்தார்.

பகவத்கீதை
இப்போது மீண்டும் அதே அறிவிப்பையே நேற்றைய தினம் வெளியிட்டுள்ளார்.. கர்நாடக சட்டமேலவை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதத்தில், குஜராத் அரசு பகவத் கீதையை பள்ளிகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. கர்நாடகாவும் இதை பின்பற்ற வேண்டும் என்று பாஜக பிரனேஷ் கேட்டுக்கொண்டதையடுத்து, அமைச்சர் நாகேஷ் இதற்கு பதிலளித்து பேசினார்.. அப்போது, மகாபாரத போரின்போது, அர்ஜுனன் மனதில் குழப்பம் ஏற்பட்டது... அப்போது அவருக்கு ஸ்ரீகிருஷ்ணர் போதித்தது தான் பகவத் கீதை...

கொந்தளிப்பு
இப்போதைய குழப்பமான சூழ்நிலைகளுக்கு, பகவத கீதைதான் சிறந்த தீர்வு அளிக்கும்... இதை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்பது பலரது கருத்தாகும்.. பகவத் கீதையை பாடத்தில் சேர்ப்பது தொடர்பாக, அரசு கமிட்டி ஒன்றை அமைக்கும். அதன்பிறகு முதல்வருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்" என்றார். ஏற்கனவே கல்வி மயம் காவி மயமாகி வருகிறது என்ற சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில், கர்நாடக அரசின் இந்த அறிவிப்புகள் மேலும் கொந்தளிப்பையும், எதிர்மறை விமர்சனங்களையும் தாங்கி ஏற்படுத்தி வருகிறது.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications