சர்ச்சை பேச்சுகளின் பீரங்கி! யார் இந்த ஈஸ்வரப்பா! அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான காரணம் என்ன?
பெங்களூர்: கர்நாடகத்தில் 40 சதவீத கமிஷன் புகார் கூறி காண்ட்ராக்டர் தற்கொலை செய்த வழக்கில் கேஎஸ் ஈஸ்வரப்பா தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளார். சர்ச்சை பேச்சுக்களுக்கு பெயர் பெற்ற இவர் தான் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடிக்கு பதில் காவிக்கொடி ஏற்றப்படும் எனவும் கூறியிருந்தார்.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. பசவராஜ் பொம்மை முதல்வராக உள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக கேஎஸ் ஈஸ்வரப்பா உள்ளார்.
இந்நிலையில் தான் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்ட அரசு பணிகளுக்கான பணத்தை விடுவிக்க 40 சதவீதம் வரை அமைச்சர் ஈஸ்வரப்பா கமிஷன் கேட்டதாக கூறி காண்ட்ராக்டர் சந்தோஷ் பட்டீல் விஷம் குடித்து தற்கொலை செய்தார். இதுதொடர்பாக ஈஸ்வரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்த குற்றச்சாட்டை ஈஸ்வரப்பா இன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.

யார் இந்த ஈஸ்வரப்பா
அடிப்படையில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து வந்த கேஎஸ் ஈஸ்வரப்பா சிவமொக்கா சட்டசபை தொகுதி எம்எல்ஏ ஆவார். கர்நாடக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். இவர் சர்ச்சைக்கு பெயர் பெற்றவர். இவர் கூறும் கருத்துக்கள் அடிக்கடி விவாதமாக மாறும். இது கட்சிக்குள் ஒருவித அதிருப்தியையும் ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில் அவரது சமீபத்திய சர்ச்சை பேச்சுக்களின் விவரம் வருமாறு:

செங்கோட்டையில் காவிக்கொடி
2022 பிப்ரவரியில் ஹிஜாப் பிரச்சனையின்போது சிவமொக்காவில் உள்ள அரசு கல்லூரியில் தேசியக்கொடி அகற்றப்பட்டு காவிக்கொடி பறக்கவிடப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவக்குமார் குற்றம்சாட்டினார். அப்போது பதிலளித்த ஈஸ்வரப்பா, ‛‛விரைவில் டெல்லி செங்கோட்டையில் காவி கொடி பறக்கும்'' எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதையடுத்து தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் ஈஸ்வரப்பா பேசியதாக காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி தூக்கினர். மேலும் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்து அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு இரவில் தர்ணாவை மேற்கொண்டனர்.

கொலை குறித்து சர்ச்சை
அதன்பின் பிப்ரவரி 20ல் பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த ஹர்ஷா சிவமொக்காவில் கொலை செய்யப்பட்டார். இதுபற்றி கருத்து தெரிவித்த ஈஸ்வரப்பா, ‛‛முஸ்லிம் வாலிபர்கள் தான் ஹர்ஷாவை கொலை செய்துவிட்டனர்'' என பகிரங்கமாக கூறிய ஈஸ்வரப்பா, அவர்களை விமர்சனமும் செய்தார். இது பிரச்சனை உருவாக்கும் வகையில் இருந்தது. இதனால் நீதிமன்ற உத்தரவுப்படி ஈஸ்வரப்பா மீது சிவமொக்கா தொட்டபேட்டே போலீசார் 2 வாரத்துக்கு முன்பு வழக்குப்பதிவு செய்தனர்.

ஆர்எஸ்எஸ்ஸில் முஸ்லிம்கள்
மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடர் விவாதத்திலும் ஈஸ்வரப்பா சர்ச்சையில் சிக்கினார். அப்போது சட்டசபையில், ‛‛கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் ஒரு நாள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைவார்கள். இந்த நாள் வெகு தொலைவில் இல்லை'' எனக்கூறினார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாதத்தில் 2 வழக்கு
சிவமொக்காவில் பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த ஹர்ஷா கொலை வழக்கில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக 2 வாரத்துக்கு முன்பு தான் ஈஸ்வரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக சந்தோஷ் பட்டீல் தற்கொலை தொடர்பாகவும் ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த ஒரு மாதத்துக்குள் மட்டும் 2 சம்பவங்களில் ஈஸ்வரப்பா மீது போலீசார் வழக்குப்பதிந்து உள்ளனர். இதில் சந்தோஷ் பட்டீல் தற்கொலை தொடர்பான வழக்கில் தான் ஈஸ்வரப்பா தனது பதவியை இழக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications