படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
பெங்களூர்: ஷோபாவை நிர்வாண கோலத்தில் பார்த்து அதிர்ச்சியடைந்து கதறிவிட்டார் அவரது மகள்.. அப்படி என்ன நடந்தது பெங்களூருவில்?
கர்நாடகா மாநிலம், பெங்களூரு கொடிகேஹள்ளி பத்ரப்பா லே அவுட்டில் வசித்து வந்தவர் ஷோபா.. 48 வயதாகிறது.. இவருக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள்.. 2 பேருக்குமே கல்யாணம் செய்து மாமியார் வீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டார். எனவே, கெடிகேஹள்ளியில், சொந்தமாக வீடு கட்டி, அதில் தனியாக வசித்து வந்தார் ஷோபா..

நிர்வாண கோலம்: இந்த நிலையில் கடந்த 19ம் தேதி ஷோபா திடீரென இறந்துவிட்டார்.. ஷோபாவின் உடல் அவரது படுக்கையறையில் கிடந்தது.. அதுவும் நிர்வாணமாக கிடந்திருக்கிறது... இதுபற்றின தகவலறிந்த கொடிகேஹள்ளி போலீஸார், ஷோபாவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணையையும் உடனடியாக மேற்கொண்டனர்.
அக்கம்பக்க வீடுகளில் விசாரணை மேற்கொண்டதுடன், ஷோபாவின் சொந்தக்காரர்களிடமும் விசாரணை நடத்தினார்கள்.. அப்போதுதான், ஹேரோஹள்ளியைச் சேர்ந்த நவீன் என்ற 23 வயது இளைஞரின் பெயர் அடிபட்டது..
ஷோபா: இந்த இளைஞருக்கும், ஷோபாவுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நவீனிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, நவீன் சொன்ன தகவலை கேட்டு போலீசார் அதிர்ந்து போனார்கள்.
ஷோபா எப்போதுமே பெரும்பாலான நோத்தை இன்ஸ்டாகிராமில் செலவிடுவாராம்.. அப்போதுதான், இன்ஸ்டாவில் நவீன் அறிமுகமாகியிருக்கிறார்.. நாளுக்கு நாள் இவர்களுக்குள் நட்பு அதிகமாகி உள்ளது.. ஒருகட்டத்தில் நேரடியாக சந்தித்து பேசியிருக்கிறார்கள்.. அப்போது, நவீனுடன் ஷோபா நெருக்கமாக பேசி, தகாத உறவிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளார்..
நவீன்: சம்பவத்தன்று, ஷோபாவின் வீட்டிற்கு நவீன் வந்திருக்கிறார்.. இருவருமே அன்றைய தினமும் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள்.. ஆனாலும், மீண்டும் மீண்டும் உறவுக்கு நவீனை ஷோபா கட்டாயப்படுத்தி கொண்டேயிருந்தாராம்.. இதனால் ஆத்திரமும், கோபமும் அடைந்த நவீன், ஷோபாவை கொன்றுவிட்டாராம்.. இது அத்தனையையும் போலீசில் நவீன் வாக்குமூலமாக சொல்லி உள்ளார்.
இதுகுறித்து போலீஸார் சொல்லும்போது, "சம்பவத்தன்று, ஷோபாவுக்கு, அவரது மகள் போன் செய்திருக்கிறார்.. பலமுறை போன் போட்டும் ஷோபா போனை எடுக்கவில்லை.. அதனால், பயந்துபோன அந்த பெண், நேரடியாகவே கிளம்பி வீட்டிற்கு வீட்டிற்கு வந்துள்ளார்.. அப்போதுதான், தன்னுடைய அம்மாவின் நிர்வாணமான கோலத்தில் கிடப்பதை அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதிர்ச்சி: பிறகு அருகில் சென்று பார்த்தபோதுதான், அம்மா கொலை செய்யப்பட்டிருந்ததை கண்டு அலறியிருக்கிறார்.. அப்போதுதான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது" என்றனர் போலீசார்.
இப்போது கொலையாளி நவீனை கொடிகேஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்.. தொடர்ந்து அவரிடம் விசாரணையும் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
கொடுமை: இந்த கொலை சம்பவமானது, ஷோபாவின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிலைகுலைய வைத்து வருகிறது.. இதில் கொடுமை என்னவென்றால், நவீனுக்கும், ஷோபாவின் மகள் வயதுதான் ஆகிறதாம்...!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications