Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bangalore: பெங்களூர் பஸ் ஸ்டாண்டு அருகே பட்டப்பகலில் நடந்த கொடூரம்! துடிதுடித்த மனைவி.. கணவன் செய்த படுபாதக செயல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் (Bangalore) பட்டப்பகலில் பேருந்து நிலையம் அருகே வைத்து பெண்ணை அவரது 2-வது கணவர் கத்தியால் குத்தி படுகொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. பயணிகள் கண்முன்னேயே வெறிச்செயலில் ஈடுபட்ட பெண்ணின் கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். பட்ட பகலில் பயணிகள் முன்பாக நடைபெற்ற இந்த கொலை வெறித் தாக்குதல் சம்பவம் அங்கிருந்த பயணிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள சுங்கடக்கட்டே பேருந்து நிலையத்தில் பட்ட பகலில் தனது மனைவியை கார் டிரைவர் கொடூரமாக குத்திக்கொலை செய்துள்ளார். பேருந்து நிலையத்தில் நின்றவர்களை பதறவைத்த இந்த கொடூர கொலை குறித்த விவரம் வருமாறு:-

woman-fatally-stabbed-by-cab-driver-near-bangalore-bus-stand-daughter-witnesses-tragedy

கணவன் மனைவி இடையே வாக்குவாதம்

கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியை சேர்ந்தவர் ரேகா. கால் சென்டர் ஒன்றில் பணியாற்றி வரும் ரேகா, இவரது கணவர் லோஹித்ஷ்வா. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும். திருமணத்திற்கு பிறகு கேப்பஹெல்லியில் வசித்து வந்தனர். ரேகா, தான் வேலை பார்க்கும் நிறுவனத்திலேயே தனது கணவருக்கு வேலை கிடைக்க பரிந்துரைத்துள்ளார்.

இதன்படி, அந்த நிறுவனத்தில் கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார் லோஹித்ஷ்வா. இந்த நிலையில்தான் சம்பவத்தன்று சுங்கடக்கட்டே பேருந்து நிலையம் அருகே தனது மகளுடன் ரேகா சாலையை கடக்க காத்திருந்தார். அப்போது அங்கு வந்த கணவர் லோஹித்ஷ்வா தனது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்

பொது இடம் என்றும் பாராமல் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட லோஹித்ஷ்வா, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் கொடூரமாக குத்தினார். தாலி கட்டிய மனைவி என்றும் பாராமல், கண் மூடித்தனமாக ஆத்திரம் தீரும் வரை லோஹித்ஷ்வா 11 முறை கத்தியால் குத்தினார். அருகில் நின்ற மகள் தாயை காப்பாற்ற முயன்றார்.

ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த ரேகா, நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பட்டப்பகலில் பயணிகள் முன்பாக நடைபெற்ற இந்த கொலை வெறித் தாக்குதல் சம்பவம் அங்கிருந்த பயணிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது. சினிமாவில் கூட பார்க்க முடியாத காட்சிகளை நேரில் பார்த்ததால், ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போனர். பின்னர் சுதாரித்த பயணிகள், மனைவியை கத்தியால் குத்திய லோஹித்ஷ்வாவை பிடிக்க முயன்றனர்.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

அதற்குள் லோஹித்ஷ்வா அங்கிருந்து தப்பி ஒட்டம் பிடித்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் நிகழ்விடத்திற்கு வந்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய ரேகாவை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் ரேகா உயிரிழந்தார்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார்

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தலைமறைவான லோஹித்ஷ்வாவை போலீசார் தேடி வருகின்றனர். ரேகா கொலை செய்யப்பட்டதால், அவரது இரண்டு குழந்தைகளும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவத்தின் முக்கிய சாட்சியாக உள்ள மகளுக்கு கவுன்சிலிங் அளிக்க உள்ளதாகவும், அவரிடம் பிறகு வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+