ஆரணி தொகுதியை வாங்கித்தர பாஜக பிரமுகரிடம் ரூ.50 லட்சம் மோசடி: மத்திய அமைச்சரின் மாஜி உதவியாளர் கைது
ஆரணி தொகுதியில், எம்எல்ஏ சீட் வாங்கி தருவதாக சொந்தக் கட்சிக்காரரிடமே ரூ,50 லட்சம் மோசடி செய்து, தலைமறைவான மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் முன்னாள் உதவியாளர் மற்றும் அவரின் தந்தை ஆகியோர், பாண்டிபசார் போலீசார் ஹைதராபாத்தில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
ஆரணி பாஜக பிரமுகரிடம் பணமோசடி செய்த மத்திய அமைச்சரின் முன்னாள் உதவியாளர்
திருவண்ணாமலை, ஆரணி, ஜெயலட்சுமி நகரை சேர்ந்தவர் புவனேஷ் குமார்(29), இவர், ஆரணி பாஜக நகர தலைவராக உள்ளார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், பாஜக அதிமுக கூட்டணியில் ஆரணியில் போட்டியிட ஆசைப்பட்டார், அதற்காக, சென்னை, பெரம்பூர், அதிமுக வடசென்னை மாவட்ட நிர்வாகி விஜராமனை சந்தித்தார். பின்னர் இருவரும் அப்போதைய பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளராக இருந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் நெருங்கிய உதவியாளர் நரோத்தமனிடம் அணுகியுள்ளனர்.

தொகுதி வாங்கித்தர ரூ.1 கோடி லஞ்சம்
நரோத்தமன் தனக்கு செல்வாக்கு இருப்பதாக தெரிவித்து, ஆரணி தொகுதியில் போட்டியிட தன்னால் எம்.எல்.ஏ சீட் வாங்கி தர முடியும் எனக்கூறி அதற்கு செலவாகும் எனத் தெரிவித்துள்ளார். பின்னர் ரூ. 1 கோடி பேரம் பேசி, முதல் தவணையாக ரூ.50 லட்சம் தரவேண்டும், வென்றப்பின் மீதி ரூ.50 லட்சத்தை தரவேண்டும் என ரூ. 50 லட்சத்தை தி.நகரில் ஓட்டல் ஒன்றில் வைத்து, புவனேஷ்குமார், நரோத்தமன், விஜயராமன் ஆகியோரிடம் ரூ.50 லட்சம் கொடுதுள்ளார்.
திருவண்ணாமலை தொகுதியில் தங்கைக்கு
ஆனால், ஆரணி தொகுதி அதிமுக கூட்டணிக்கு மீண்டும் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கே ஒதுக்கப்பட்டது. திருவண்ணாமலை தொகுதியில், புவனேஷ் குமார் தங்கை வசந்திக்கு பெற்று தருவதாக கூறி, அதையும் அவர் செய்யவில்லை. அங்கு பாஜக வேட்பாளராக தங்கவேல் என்பவர் போட்டியிட்டார்.
பணமோசடி , கொலை மிரட்டல்
இதனால் ஏமாற்றமடைந்த , புவனேஷ்குமார், நரோத்தமனிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். ஆனால், பணத்தை திருப்பித்தராமல் பணம் கேட்ட புவனேஷ்குமாரை, நரோத்தமன், அவரின் தந்தை சிட்டிபாபு ஆகியோர் மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர், இதையடுத்து, புவனேஷ் குமார் பாண்டி பசார் போலீசில் புகார் கொடுத்தார், புகாரைப்பெற்ற போலீசார், நரோத்தமன், சிட்டிபாபு, விஜயராமன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
மடக்கி பிடித்த பாண்டிபசார் போலீஸார்
அதற்குள் நரோத்தமன், சிட்டிபாபு இருவரும் தலைமறைவாகி விட்டனர், இதையடுத்து, தனிப்படை போலீசார் அவர்களை தேடி வந்தனர். அவர்கள் இருவரும் ஹைதராபாத்தில் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்ததை அடுத்து தனிப்படை போலீஸார் ஹைதராபாத் சென்று அங்கு பதுங்கியிருந்த நரோத்தமன், சிட்டிபாபுவை கைது செய்தனர். இன்று மாலை சென்னை அழைத்து வருகின்றனர்.
சொந்தக்கட்சிக்காரரிடமே பணமோசடி, கொலை மிரட்டல்
பாஜக மத்திய அமைச்சரின் முன்னாள் உதவியாளர், தேர்தல் பொறுப்பாளராக வந்த அமைச்சரின் உதவியாளராக இருந்தவர் சொந்தக் கட்சியின் பிரமுகரையே மோசடி செய்து பணத்தையும் திருப்பித்தராமல் கொலை மிரட்டல் விடுத்து கைதாகியுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications