AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்!
இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்புப் பயணம் தற்போது உலகமே வியக்கும் வண்ணம் வேகமாக வளர்ந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியால், உலகளாவிய பெருநிறுவனங்கள் அனைத்தும் தங்களின் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியாவைத் தேர்வு செய்து வருகின்றன.
இத்தகைய சூழலில், ஆஸ்திரேலியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி அதிநவீன 'ஹைப்பர்ஸ்கேல் டேட்டா சென்டர்' நிறுவனமான ஏர்டிரங்க் (AirTrunk), இந்தியாவில் சுமார் ரூ.3 லட்சம் கோடி (30 பில்லியன் டாலர்) முதலீடு செய்யப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.

நாட்டின் டிஜிட்டல் வர்த்தக துறையின் வரலாற்றில் இது மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த மெகா திட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடியும் தனது மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துள்ளார்.
சென்னை அம்பத்தூரில் அடித்தளம்
ஆஸ்திரேலியாவின் ஏர்டிரங்க் நிறுவனம் சமீபத்தில் லூமினா கிளவுட்இன்ஃப்ரா (Lumina CloudInfra) நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன் மூலம் இந்தியச் சந்தைக்குள் நுழைந்தது. இந்த லூமினா கிளவுட்இன்ஃப்ரா தளம் மூலமாக, சென்னையில் சுமார் 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளது.
இதற்காக, சென்னை ஐடி மற்றும் தொழில் துறையின் மிக முக்கிய மையமாக விளங்கும் அம்பத்தூர் பகுதியில் 16 ஏக்கர் நிலப்பரப்பை இந்நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த பிரம்மாண்ட நிலப்பரப்பில், சுமார் 216 மெகாவாட் (MW) திறன் கொண்ட பிரம்மாண்ட 'ஹைப்பர்ஸ்கேல் டேட்டா சென்டர்' வளாகம் அமையவுள்ளது.
எல் அண்ட் டி நிறுவனம்
சென்னையை இந்தியாவின் மிக முக்கிய டிஜிட்டல் மையமாக (Digital Hub) மாற்றுவதற்குத் தமிழக அரசும் மிக தீவிரமான ஆதரவை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, எல் அண்ட் டி (L&T) நிறுவனத்திற்குச் சொந்தமான சென்னை டேட்டா சென்டரை மேலும் விரிவாக்கம் செய்வதற்காக, தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அண்மையில் 1500 கோடி ரூபாய் முதலீட்டிற்கான ஒப்புதலை அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது.
மாநில அரசின் இத்தகைய விரைவான தொழில் கொள்கை முடிவுகளும், ஒற்றைச் சாளர அனுமதிகளும் உலகளாவிய நிறுவனங்களைச் சென்னை நோக்கிப் படையெடுக்க வைக்கின்றன.
5 ஜிகாவாட் மெகா டேட்டா சென்டர்
இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 5 ஜிகாவாட் (GW) வரையிலான பிரம்மாண்ட டேட்டா சென்டர் திறனை உருவாக்கப் போவதாக ஏர்டிரங்க் நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த மெகா முதலீடுகள் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் (X) பக்கத்தில், "இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்புப் பயணம் வியக்கத்தக்க வேகத்தில் நகர்கிறது. இத்தகைய உலகத்தரம் வாய்ந்த முதலீடுகள், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளில் உலகளாவிய மையமாக இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்தும்" என்று மிகவும் பெருமிதத்தோடு குறிப்பிட்டுள்ளார்.
வேலைவாய்ப்புகள்
இது மிகப்பெரிய கார்ப்பரேட் முதலீடாக இது பார்க்கப்பட்டாலும், இதனால் சாமானிய மக்களுக்கும், இளைஞர்களுக்கும் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கவுள்ளன. இந்த பிரம்மாண்ட டேட்டா சென்டர் கட்டுமானப் பணிகள் மற்றும் அதன் தினசரிச் செயல்பாடுகள் மூலமாக ஆயிரக்கணக்கான புதிய உயர்தர வேலைவாய்ப்புகள் (High-Value Jobs) உருவாகவுள்ளன.
-
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு












Click it and Unblock the Notifications