சென்னையில் தங்க நகையை பில் போட போனபோது இறங்கிய இடி! பெரிய தொகை நஷ்டம்.. கதறும் மக்கள்! என்னாச்சு
சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், நகை வாங்கச் செல்வோருக்கு ஒவ்வொரு நாளும் மிகப் பெரிய அதிர்ச்சியே காத்திருக்கிறது. இன்று அதைவிட மேலே போய் ஒரு சம்பவம் நடந்துள்ளது. காலையில் நகை வாங்கச் சென்றோர், நகை மாடலை தேர்வு செய்து பில் போட வருவதற்குள் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் தங்கம் எப்போதுமே முக்கியமான முதலீடாக இருந்துள்ளது. கலாச்சார ரீதியாகவும் தங்கத்திற்கு முக்கிய இடம் இருப்பதால் இந்தியர்கள் எப்போதுமே தங்கத்தை வாங்கியே வந்துள்ளனர். இந்தியாவில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவால் தங்கம் விலை சீராக உயர்ந்து வந்துள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நிலைமை மொத்தமாக மாறிவிட்டது.

தங்கம்
கடந்த 2000 முதல் 2019, அதாவது கொரோனாவுக்கு முன்பு வரை தங்கம் விலை இந்தியாவில் ஆண்டுக்குச் சராசரியாக 11.6% உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு தங்கம் விலையேற்றம் சற்ற வேகமெடுத்தாலும் கூட 2024 வரை ஆண்டுக்குச் சராசரியாக 12.1% மட்டுமே உயர்ந்தது. ஆனால், டிரம்ப் மீண்டும் அதிபராகப் பதவியேற்ற உடன் நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. கடந்த 2025 முதல் இப்போது வரை மட்டும் தங்கம் விலை கிட்டத்தட்ட 94% உயர்ந்துள்ளது. அதாவது தங்கம் விலை இரண்டே ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. இதனால் தங்கத்தை வாங்க நினைப்போர் அதிர்ச்சியின் உச்சத்திற்கே போய் இருக்கிறார்கள்.
விலையை முடிவு செய்வது யார்
பொதுவாகச் சர்வதேச சந்தையில் தங்கம் விலையைப் பொறுத்தே இந்தியாவிலும் தங்கம் விலை இருக்கும். லண்டனில் உள்ள தங்க மார்கெட் தான் உலகிற்கே முன்னோடி. அங்கு ஒரு நாளுக்கு இரண்டு முறை தங்கம் விலை மாற்றி அமைக்கப்படும் நிலையில், அதற்கேற்ப இந்தியாவிலும் தங்கம் விலை மாற்றி அமைக்கப்படும். இந்தியாவின் தங்கம் விலையை மும்பையில் உள்ள சாவேரி பஜார் தான் நிர்ணயம் செய்கிறது.
இரண்டு முறை
முன்பெல்லாம் தினசரி ஒரு முறை மட்டுமே தங்கம் விலை மாற்றி அமைக்கப்படும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல நாட்கள் இரண்டு முறை மாற்றி அமைக்கப்படும் அளவுக்குக் கூட தங்கம் விலை உயர்ந்திருந்தது. இன்று அதையும் விட மோசமாக 3 மணி நேரத்திற்குள் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்தது. சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கம் 2800 ரூபாய் உயர்ந்த நிலையில், பகலில் மீண்டும் ரூ.1320 உயர்ந்தது. அதாவது தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,15,320க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.14,415க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய ஏற்றமே இதற்குக் காரணமாகும். காலை 9 மணியளவில் 4800 டாலரை கடந்த தங்கம், வெறும் 3 மணி நேரத்தில் 4880 டாலர் வரை உயர்ந்தது. கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்ப் மிரட்டல், அமெரிக்க- ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகப் போர் அச்சம் ஆகியவை பிரதானக் காரணமாக இருக்கிறது. மேலும், டாலர் மதிப்பும் சரியும் நிலையில், அதுவும் தங்கம் விலை உயரக் காரணமாக இருக்கிறது.
கதறல்
இதன் காரணமாகவே இந்தியாவில் 3 மணி நேர இடைவெளியில் தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்துள்ளது. தங்கம் வாங்க இன்று காலை கடைக்குச் சென்றவர்களுக்கு இதனால் பெரிய அதிர்ச்சி தான். எப்போதும் கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்குத் தங்கம் வாங்கச் செல்லும்போது, பொறுமையாக 3, 4 மணி நேரம் உட்கார்ந்து பார்த்துத் தான் தங்கம் வாங்குவார்கள்.
இன்று காலை ஒரே ரேட் மதியம் ஒரு ரேட் என மாறியிருக்கிறது. பொதுவாக நகைக் கடைகளில் ரியல் டைம் மார்கெட் விலையை வைத்தே பில் போடுவார்கள். இதனால் நகையைத் தேர்வு செய்து பில் போட காத்திருந்தோருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாகவே இருக்கும். கொஞ்ச நேரம் முன்பு பில் போட்டு இருந்தால் கூட பல ஆயிரத்தைச் சேமித்து இருக்கலாம் எனப் புலம்பித் தள்ளுகிறார்கள்.
-
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
உலக தங்க மார்க்கெட்டே கதறப்போகுது.. புதின் போட்ட முக்கிய உத்தரவு.. தங்கத்தை அஸ்திரமாக மாற்றிய ரஷ்யா -
கயிறு அவிழப்போகுது.. தங்கத்தின் 'திக் திக்' நிமிடங்கள்.. ஸ்விஸ் வங்கி விடுக்கும் பயங்கர வார்னிங்! -
நிலத்தைத் தோண்டும்போது தங்கம், சிலைகள் கிடைத்தால் செய்ய வேண்டியவை? கவனிக்காவிட்டால் ஜெயில் நிச்சயம் -
மூட்டை மூட்டையாக.. தங்கத்தை டன் கணக்கில் மார்க்கெட்டில் கொட்டிய துருக்கி.. ஏன் தெரியுமா? ஷாக் -
அமெரிக்கா போரில் பிஸி.. சத்தமின்றி சீனா உருவாக்கும் 'தங்கக் கவசம்'.. ஆட்டம் காணும் உலகப் பொருளாதாரம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications