தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு
டெல்லி: அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவில், நகை தொழில் துறைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், அதிக அளவு தங்கம் ஏற்றுமதி செய்வதால் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகபட்ச அளவான 4.8 சதவீதத்தை எட்டியது.
இதையடுத்து நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்வை சமாளிக்கவும், உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்கவும் மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கடந்த ஜூன் மாதம் இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

பின்னர் கடந்த மாதம் 10 சதவீதமாக உயர்ந்தது. வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் இறக்குமதி வரியும் 10 சதவீதமாக உயர்ந்தது. இதன் காரணமாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது.
இந்நிலையில், தங்கம் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு இன்று மேலும் 5 சதவீதம், அதாவது 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. அதேசமயம் ரிசர்வ் வங்கியும் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் 845 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு அதனை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி மந்திரி ப.சிதம்பரம் ஏற்கனவே தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 650 மில்லியன் டாலருக்கும், ஜூலையில் 2.2 பில்லியன் டாலருக்கும் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.
இறக்குமதி குறைப்பதன்மூலம், அன்னிய செலாவணி வெளியேறுவதை தடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் நகைக்கடைகளில் தங்கத்தின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications