கேஸ்சிலிண்டர், மண்ணெண்ணெய் விலை உயர்கிறது?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலையை உயர்த்த பெட்ரோலிய அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சமையல் எரிவாயு விலையை உயர்த்துமாறு கிரித் பாரிக் குழு அரசுக்கு பரிந்தரை செய்திருந்தது. மேலும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.250 உயர்த்தவும், மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.4 முதல் 5 வரை உயர்த்தவும் கடந்த ஆண்டு அந்த நிபுணர் குழு பரிந்துரை செய்திருந்தது.
இதையடுத்து, சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலையை உயர்த்துவது குறித்து அரசியல் விவகார அமைச்சகக் குழுவிடம் விவாதிக்க பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்திருப்பதாகவும், டீசல் விலையை மாதந்தோறும் 50 காசு உயர்த்தும் நடைமுறையை தொடரவும் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications