வங்கி சேமிப்பு கணக்குகளில் கேட்பாற்று கிடக்கும் ரூ.3,652 கோடி
மும்பை: நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் சேமிப்பு கணக்குகளில் கேட்பாரற்று ரூ.3,652 கோடி ரூபாய் அளவுக்கு இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2012ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் ரூ.3,652.3 கோடி ரூபாய் கேட்பாரற்று பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் வங்கியில் மட்டும் ரூ.714 கோடி பணம் பல வங்கிக் கணக்குகளில் இருக்கிறது. அடுத்த இடத்தில் கனரா வங்கி உள்ளது. அதில், ரூ.525.8 கோடியும் உள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகள் வரை வங்கிக் கணக்கை பயன்படுத்தவில்லை என்றால், அது பயன்பாடு அற்ற கணக்காக கொள்ளப்படும். மேலும் 8 ஆண்டுகள் வரை, வங்கிக் கணக்கை எந்த வகையிலும் பயன்படுத்தாமல் இருந்தால், அது கேட்பாரற்ற கணக்குக்கு மாற்றப்படும்.
பல காலம் கழித்து, கணக்குக்கு உரியவர் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து தனது கணக்கில் இருந்த பணத்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இந்த கேட்பாரற்ற தொகையில், பெருமளவு பல்வேறு ஊரகப் பகுதிகளில் ரூ.1000ம் செலுத்தி வங்கிக் கணக்கை துவக்கிவிட்டு, பிறகு அதனை பயன்படுத்தாமல் இருப்பதாகவே உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications